PM கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 4,000 பெற செப்டம்பர் 30 க்கு முன் விண்ணப்பிக்கவும்!


பிஎம் கிசானின் நன்மைகளை பெரும் விவசாயியாக இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. தகவலின்படி மத்திய அரசின் மிகவும் பிரபலமான திட்டமான PM கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ 2000 க்கு பதிலாக ரூ .4000 கிடைக்கும்.


இந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் 2 வருடங்களுக்கு முன்பு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா தொடங்கப்பட்டது. கோவிட் -19 ஊரடங்கு காலத்தில் இந்த திட்டம் விவசாய சமூகத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது.



நீங்கள் PM கிசான் திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயியாக இருந்தால் இரட்டிப்பு பணம் பெறலாம், விரைந்து பதிவு செய்யுங்கள். பதிவு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும். பதிவுசெய்த பிறகு, காலக்கெடுவிற்குள் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், நவம்பர் மாதத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ 2000 பெற முடியும். மேலும், டிசம்பர் மாதத்தில் நீங்கள் மற்றொரு தவணை ரூ. 2000 பெறுவீர்கள். இதன் பொருள் மொத்த ரூ. 4000 உங்கள் கணக்கிற்கு வரும்.


பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் தொகையை அதிகரிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலின் அடிப்படையில் நடந்தால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 க்கு பதிலாக மூன்று தவணைகளில் ரூ.12,000 கிடைக்கும்.



இதுவரை, 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர், மேலும் முழு விவசாய சமூகத்தையும் விரைவில் உள்ளடக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


PM கிசான் ஆப் பதிவு


விரைவான பதிவுக்காக PM கிசான் மொபைல் செயலியைப் பதிவிறக்கவும். அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்திலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். மொபைல் மற்றும் இணையதள பதிவுக்கான படிகள் ஒன்று மட்டும் தான். ஒரே ஒரு வித்தியாசம் PM கிசான் ஆப் மூலம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கும் பதிவு செய்யலாம் மற்றும் அனைத்து தகவல்களுக்கும் விரைவான அணுகலைப் பெறலாம்.


1. PM கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளம் அதாவது pmkisan.gov.in/ க்குச் செல்லவும்.


2. முகப்புப்பக்கத்தில் 'விவசாயிகளின் பிரிவை' தேடுங்கள்.


3. பின்னர் 'புதிய விவசாயி பதிவு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.


4. ஆதார் அட்டை விவரங்களை கவனமாக உள்ளிட்டு பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.



5. இப்போது சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.


6. விண்ணப்ப படிவம் திரையில் தோன்றும். தேவையான அனைத்து விவரங்களையும் மிக கவனமாக நிரப்பவும்.


7. இறுதியாக படிவத்தை சமர்ப்பிக்கவும்.


8. நீங்கள் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால் PM-Kisan உதவி எண்: 011-24300606,155261 -ற்கு  அழைக்கவும்.


மேலும் படிக்க....


நெய்பயிரில் நீர் சிக்கனம் செய்து லாபகரமான விவசாயம் செய்ய எளிய டிப்ஸ்!!


சம்பா நெல் சாகுபடி கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்!


பிரதமர் ஆவாஸ் யோஜனா 2021 குறித்த நல்ல செய்தி உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post