மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து பிரதமர் மோடி அறிவிப்பு!! விவசாயிகள் மகிழ்ச்சி!!



மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து பிரதமர் மோடி அறிவிப்பு!! விவசாயிகள் மகிழ்ச்சி!!


குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எனது ஐம்பதாண்டு கால பொது வாழ்க்கையில் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை மிகவும் நெருக்கமாக இருந்து நான் பார்த்திருக்கிறேன். 


எனவே, இந்த நாட்டிற்குப் பிரதமராக சேவை செய்ய 2014ல் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது வேளாண் வளர்ச்சிக்கும் விவசாயிகள் நலனுக்கும் உயர்ந்தபட்ச முன்னுரிமையை நாங்கள் வழங்கினோம். விவசாயிகளின் நிலைமையை சீர்படுத்த விதைகள், காப்பீடு, சந்தை, சேமிப்பு ஆகிய நான்கு முனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பிரதமர் கூறினார். 



நல்ல தரமான விதைகளோடு வேம்பு கலக்கப்பட்ட யூரியா, மண்வள அட்டை, நுண்ணீர் பாசனம் போன்ற வசதிகளையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கியது என்று அவர் கூறினார்.

 

விவசாயிகளின் கடின உழைப்பிற்குப் பயனாக அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க பல முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். நாடு தனது ஊரக சந்தைக் கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. 


எம்எஸ்பி-யை உயர்த்தியது மட்டுமின்றி சாதனை எண்ணிக்கையில் அரசு கொள்முதல் மையங்களையும் உருவாக்கியதாகவும், அரசால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் கடந்த பல பத்தாண்டுகளின் சாதனைகளை முறியடித்துள்ளது என்று கூறினார்.

 

விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்கான மகத்தான இயக்கத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் நாட்டில் கொண்டு வரப்பட்டதாக கூறிய பிரதமர், நாட்டில் உள்ள விவசாயிகளை, குறிப்பாக சிறு விவசாயிகளை வலுப்படுத்தவேண்டும், அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கு சரியான விலையை அவர்கள் பெறவேண்டும், அவர்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பது இதன் நோக்கமாக இருந்தது என்றார்.


பல ஆண்டுகளாக நாட்டின் விவசாயிகளும், நாட்டின் வேளாண் நிபுணர்களும், நாட்டின் விவசாயிகள் அமைப்புகளும் தொடர்ச்சியாக இந்த கோரிக்கையை வைத்திருந்ததாக பிரதமர் கூறினார். இதற்கு முன்பும் இது குறித்து பல அரசுகள் சிந்தித்துள்ளன. இந்த முறையும் கூட நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு பல தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 



நாட்டின் மூலை முடுக்கில் உள்ள பல விவசாய அமைப்புகள் இதனை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த செயலுக்கு ஆதரவளித்த அமைப்புகளுக்கும், விவசாயிகளுக்கும், தனி நபர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

 

விவசாயிகளின் நலனுக்காக குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக வேளாண் துறையின் நலனுக்காக கிராமப்புற ஏழை மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முழுமையான நேர்மையுடன் தெளிவான உணர்வுடன் விவசாயிகள் குறித்த அர்ப்பணிப்புடன் இந்த சட்டங்களை அரசு கொண்டுவந்ததாக பிரதமர் கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், முழுக்க முழுக்க தூய்மையான, விவசாயிகளின் நலன் சார்ந்த இத்தகைய புனிதமான ஒரு விஷயத்தை எங்களின் முயற்சிகளுக்கு அப்பால் சில விவசாயிகளுக்கு எங்களால் விவரிக்க முடியவில்லை. வேளாண் பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், முற்போக்கு சிந்தனை கொண்ட விவசாயிகள் ஆகியோரும் வேளாண் சட்டத்தின் முக்கியத்தை அவர்களுக்குப் புரியவைக்க தங்களால் இயன்ற முயற்சிகளை செய்தனர் என்றார்.

 

மூன்று வேளான் சட்டங்களையும் திரும்பப்பெற நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதை உங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன். இம்மாத பிற்பகுதியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை நாங்கள் நிறைவு செய்வோம் என்று பிரதமர் கூறினார்.

 


மேலும், ஜீரோ பட்ஜெட் அடிப்படையில் வேளாண்மையை மேம்படுத்த, நாட்டின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப, சாகுபடி முறையில் மாற்றம் செய்ய, எம்எஸ்பி-யை அதிக பயனுள்ளதாகவும் வெளிப்படைத் தன்மை உள்ளதாகவும் மாற்ற குழு ஒன்று அமைப்பது பற்றி அவர் அறிவித்தார். இக் குழு மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள் ஆகியோரைப் பிரதிநிதிகளாகக் கொண்டிருக்கும்.


மேலும் படிக்க....


கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ரூ.2,10,000/-க்கான நிவாரண உதவிகளை வழங்கினார்!!


PM Kisan: 10வது தவணையுடன் மேலும் மூன்று வசதிகள்! 2000 ரூபாய்க்கு பதிலாக 4000 ரூபாய்!


நெல் சாகுபடியில் பாக்டீரியா இலைக்கருகல் நோயினை கட்டுப்படுத்த வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments