அதிகாலைப் பனியினால் உளுந்தில் அதிகரிக்கும் சாம்பல் நோய் மற்றும் அதன் கட்டுப்பாடு முறைகள்!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்கு பின் உளுந்தாகவும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடியாகவும் உளுந்து விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது 2500 ஏக்கருக்கு மேல் சாகுபடி உள்ள உளுந்து பயிரில் தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் பரவலாக சாம்பல் நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.
முதலில் வெள்ளை கலர் பவுடர் போல இலையின் மேற்பகுதியில் காணப்படும் நோயின் அறிகுறி தொடர்ச்சியான அதிகாலை பனியினால் அதிகரித்து இலை முழுவதுமே சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும் நிலையின் அடிப்பாகம் இந்த சாம்பல் நிற நோயானது பரவுகிறது.
இதனால் இலையின் நிறம் மங்கி அதிக பாதிக்கப்பட்ட நிலையானது சுருங்கி காயத் தொடங்கும். உரிய காலத்துக்கு முன்பு இலை மஞ்சளாகி கீழே விழுந்து விடும். சாம்பல் நோய் தாக்குதல் அதிகமாகும் பொழுது பயிர் தன்னை காத்துக் கொள்வதற்காக மிக விரைவாக முதிர்ச்சி அடைய தொடங்கும். இதனால் பயிரின் மகசூல் பாதிக்கப்படுகிறது.
உரிய நேரத்தில் இதனை கட்டுப்படுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு பொருளாதார சேதத்தை உருவாக்கும். மிக ஆரம்ப கட்டமாக நோயின் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் 5 சத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது மூன்று சதவீத வேப்ப எண்ணையை 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
யூகலிப்டஸ் கரைசல்10% இலை கரைசலை 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது ஏக்கருக்கு 200 கிராம் ப்ரோபிகோனசோல் மருந்தினை 20 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் ஒரு டேங்குக்கு ஒரு லிட்டர் கரைசல் மற்றும் 9 லிட்டர் நீருடன் கலந்து இலை நனையும்படி நன்கு தெளிக்க வேண்டும்.
நோயின் தாக்குதல் குறையாத பட்சத்தில் பத்து நாள் இடைவெளியில் மீள ஒரு முறை இம்மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே தற்போது நிலவும் இரவின் கடும் குளிர் மற்றும் அதிகாலை நேர அதீத பனியினால் உளுந்து பயிரில் தோன்றும் சாம்பல் நோயினை ஏற்ற நேரத்தில் கவனித்து கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவித்திட வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் கேட்டுக்கொள்கிறார்.
மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் சாம்பல் நோயினால் பாதிக்கப்பட்ட உளுந்து வயலை பார்வையிட்டு விவசாயிகளுக்கு நோயின் தன்மையை எடுத்து கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 500 தென்னங்கன்றுகள்!!
50% மானிய விலையில் எட்டு கிலோ உளுந்து!! 100% மானியத்தில் இரண்டு நெட்டை தென்னங்கன்றுகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...