நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு  மானியத்தில் இடுபொருள்கள்!!


தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு  மானியத்தில் இடுபொருள்கள். தஞ்சை மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன் வழங்கினார்.



தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்திற்கு தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் நெல் திட்டத்தின் கீழ் சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள பெரிய கோட்டை கிராமம் தேர்வு செய்யப்பட்டு 26 விவசாயிகளுக்கு நெல் விதை நெல் நுண்ணூட்டம் அசோஸ்பைரில்லம் பாஸ்போபேக்டீரியா பொட்டாஸ் மொபலைசிங் பாக்டீரியா மற்றும் சிங் சாலுயுபலைசிங் பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 3 கிலோ உளுந்து மற்றும்  நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடிக்கு தேவையான வம்பன் 8  உளுந்து விதை ரைசோபியம் பாஸ்போபேக்டீரியா மற்றும் பொட்டாஸ் மொபைலைசிங் பாக்டீரியா சூடோமோனஸ் மற்றும் பயறு நுண்ணூட்டம் உள்ளிட்ட இடுபொருட்கள் 26 விவசாயிகளுக்கு சிரமேல்குடி வேளாண் விரிவாக்கம் மையத்தின் மூலம்  தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன் அவர்கள் வழங்கினார். 




ரசாயன உரங்கள் பயன்பாட்டினை தவிர்த்து உயிரினங்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சூடோமோனாஸ் எதிர்உயிரி மருந்தின் முக்கியத்துவம் போன்றவை குறித்து பெரிய கோட்டை இளமாறன் சுரேஷ் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். 


துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண்மை அலுவலர் இளங்கோ ஆகியோர் பயறு நுண்ணூட்டம் மற்றும் நெல் நுண்ணூட்டச் சத்தின் பயன்பாடு  முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். 


பெரிய கோட்டை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் ராஜா ஆகியோர் பெரிய கோட்டை விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் நெல் அறுவடை செய்யும் கருவி கைத்தளிப்பான் போன்றவைகளின் தேவைகள் பற்றி எடுத்துக் கூறினர். 


பெரிய கோட்டை வேளாண்மை உதவி அலுவலர் தினேஷ் இடுபொருள் வழங்குவதற்கான நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post