வேளாண்மைத்துறை மூலம் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நெல், மக்காச்சோளம், பருத்திக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!!


மாவட்ட நிர்வாகம் அழைப்பு


வேளாண்மைத்துறை மூலம் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2021-22ம் ஆண்டு சிறப்பு பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல் சம்பா மற்றும் பிர்க்கா அளவில் மக்காச்சோளம் பருத்தி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிக்கை செய்யப்பட்டுள்ளன.



தகுதியுடைய விவசாயிகள் யார்? யார்?


அறிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர தகுதியானவர்கள், பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம்.


இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பிற்கு காப்பீடு


விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும். அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு போன்ற இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.


விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை


கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். மேலும், விவசாயிகள் சிறப்புப் பருவத்தில் சாகுபடி காலம் (நெல் II-01.08.2021 வடி 15.11.2021, மக்காச்சோளம் II- 01.10.2021 வடி 15.12.2021, பருத்தி II- 01.10.2021 வடி 15.12.2021).


பயிர் காப்பீடு செய்ய எங்கே விண்ணப்பிப்பது?


சாகுபடி செய்தவர்கள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், தேசிய வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.



பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்


விவசாயிகளின் முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்ப படிவம், கிராம நிர்வாக அதிகாரியிடம் (வி..) பெறப்பட்ட நெல், மக்காச்சோளம், பருத்தி பயிர் சாகுபடிக்கான அசல் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

 

பயிர் காப்பீடு செய்யும்போது சரிபார்க்க வேண்டியவை?


விண்ணப்பிக்கும் போது பிரீமியத் தொகையும் கீழ்கண்ட விவரப்படி உரிய தேதிக்குள் செலுத்த வேண்டும். பதிவு செய்ததற்கான ஒப்புகைச்சீட்டில் விவசாயிகள் தங்களின் நெல் பயிர் சாகுபடி. வருவாய் கிராமம், சர்வே எண், பயிர் சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


எனவே. விவசாயிகள் PMFBY திட்டத்தின்கீழ் நெல் , மக்காச்சோளம் , பருத்தி சிறப்பு பருவத்திற்கு உரிய தேதிக்குள் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.



பயிர் காப்பீடு கடைசி தேதி விவரங்கள்


PMFBY – 2020-21 – சிறப்பு பருவ பயிர்கள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி விவரங்கள்


.எண் பயிர்கள் பயிர் காப்பீட்டுத் தொகை / ஏக்கர் (ரூ) பிரிமியத்தொகை / ஏக்கர் (ரூ.) பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்


1. நெல் II சம்பா

(வருவாய் கிராம அளவில்) 32550.20 488.25 15.11.2021.


2. மக்காச்சோளம் II

(பிர்க்கா அளவில்) 24750.20 371.25 15.12.2021.


3. பருத்தி II

(பிர்க்கா அளவில்) 7631.98 381.59 15.12.2021


மேலும் படிக்க....


விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பூச்சிக்கொல்லி இல்லாத இயற்கை விவசாயத்தின் கலாச்சாரம்!


நெய்பயிரில் நீர் சிக்கனம் செய்து லாபகரமான விவசாயம் செய்ய எளிய டிப்ஸ்!!


சம்பா நெல் சாகுபடி கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post