பிரதமரின் கிசான் திட்டத்தில் சேர விரும்புபவராநீங்கள்PM-Kisan திட்டத்தில் இணைவதற்கானத் தகுதிகள் எவை?


பிரதமரின் கிசான் திட்டத்தில் சேர விரும்புபவரா நீங்கள்? இதில் இணையத் தேவையானத் தகுதிகள், நிபந்தனைகள் உள்ளிட்டத் தகவல்களைத் தெரிந்துகொள்வது நல்லது.


PM-kisan

PMKSN (Prime Minister's Kissan Saman Nithi) அதாவது பாரத பிரதமரின் விவசாயிகள் கொடை நிதி திட்டம் 2010 ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வேளாண் இடுபொருள்கள் வாங்குவதற்காக வருடத்திற்கு ரூ.6,000 மூன்று தவணையாக வழங்கப்படுகிறது.



இணையதளம்


pmkisan.gov.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் தாங்களாகவோ அல்லது பொது சேவை மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம்.


உண்மைத்தனமை ஆய்வு


கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலோ வேளாண்மை விரிவாக்க மையத் திலோ பதிவு செய்ய இயலாது. கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு சமர்ப்பிப்பார்.


வட்டாட்சியர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் அதில் 25 சதவீதம் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வர்.


பின்னர் வருவாய் கோட்டாட்சியர் தங்கள் கூட்டத்திற்கு உட்பட்ட பயனாளி களை மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) இணைந்து அதில் 10 சதவீதம் எதேச்சை சரிபார்ப்பு செய்து அதனை மாவட்ட வருவாய் அலுவலருக்கு சமர்ப்பிப்பார்.



மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் தங்கள் கோட்டத்திற்குஉட்பட்ட பயனாளி களை மற்றும் வேளாண்மை துணை இயக்குனர்(மத்திய திட்டம்) இணைந்து அதில் 10 சதவீதம் சரிபார்ப்புசெய்து அதனை மாவட்ட வருவாய் அலுவலருக்கு சமர்ப்பிப்பார்.


மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் தகுதியுள்ள விவசாயிகளை ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு ஆய்வறிக்கை சமர்பிப்பார்.


மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுக்குப் பின்னர் மாநில இணைப்பு அலுவலர்/வேளாண்மை இயக்குருக்கு சென்னைக்கு சமர்ப்பிக்கப்படும்அதன் பின்னரே விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.


பயன்பெற நிபந்தனைகள்


1. நில பட்டாதாரராக இருக்க வேண்டும்.


2. அரசு ஊழியராக இருக்க கூடாது.


3. ஓய்வூதியம் வாங்குபவராக இருக்கக்கூடாது.


4. தொகுதி IVம் பணியிலிருந்து ஓய்வு பெற்று பத்தாயிரத்துக்கும் குறைவாக ஓய்வூதியம் வாங்குபவர்கள், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.


5. மருத்துவர், பொறியாளர்கள், Charted Accountants, Lawyers, Artechtures போன்ற தொழில் செய்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.


6. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடாது.


7. அரசுக்கு வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது.


8. ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறலாம்.


தவறுதலாக பதிவு செய்யும் விவசாயிகள் நிராகரிக்கப்படுவர்எனவே தகுதியான விவசாயிகள் மட்டும் பதிவு செய்து பயனடையுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



தகவல் வெளியீடு


சிவராணி

வேளாண்மை உதவி இயக்குனர்

பொன்னமராவதி வட்டாரம்.


மேலும் படிக்க....


தமிழக அரசு பெண்களுக்கு இலவச கோழி வழங்கும் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விளக்கம்!!


இலவசமாக 100% மானியம் மற்றும் மின் மோட்டார், நீர் குழாய்கள், நீர் சேமிப்புத் தொட்டி அமைக்க மானியம்!!


விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் உழவை எளிதாக்கும் டாப் 4 விவசாய இயந்திரங்கள்!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post