PMFBY-2021 பிர்க்கா அளவில் நெல் II, மக்காச்சோளம் II, பருத்தி
II ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு இழப்பீடு கிடைக்க மறக்காமல் இதனை செய்யுங்கள்..!!
திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்
வேளாண்மைத்துறை
மூலம் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம் நடப்பு 2021-22ம் ஆண்டு
சிறப்பு பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில்
வருவாய் கிராம அளவில் நெல் II சம்பா மற்றும் பிர்க்கா அளவில் மக்காச்சோளம் II, பருத்தி
II ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
பயன்பெறும் விவசாயிகள் யார்? யார்?
அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.
பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம்.
இழப்பீடு எதற்கெல்லாம் பொருந்தும்?
விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு போன்ற இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.
பயிர்களுக்கான பிரிமியத்தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்?
நெல் II பயிருக்கு பிரிமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.488.25. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2021 ஆகும். மக்காச்சோளம் II பயிருக்கு பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
மக்காச்சோளம் பயிருக்கு பிரிமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.371.25. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.12.2021 ஆகும், பருத்தி II பயிருக்கு பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது, பருத்தி II பயிருக்கு பிரிமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.381.59. பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 15.12.2021 ஆகும்.
அனைவருக்கும் ஒரே விதமான இழப்பீடு தொகை
கடன் பெறும்
விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்தவர்கள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை
மையங்கள், தேசிய வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ
பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.
பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்
விவசாயிகளின்
முன்மொழிவு படிவம், கிராம நிர்வாக அதிகாரியிடம் (வி.ஏ.ஓ) பெறப்பட்ட நெல் II, மக்காச்சோளம்
II, பருத்தி II பயிர் சாகுபடிக்கான அசல் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்
பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இழப்பீடு கிடைக்க விவசாயிகள் செய்ய வேண்டியவை
பதிவு செய்ததற்கான ஒப்புகைச்சீட்டில் விவசாயிகள் தங்களின் நெல் பயிர் சாகுபடி – வருவாய் கிராமம், மக்காச்சோளம் II மற்றும் பருத்தி II – பிர்க்கா பெயர், சர்வே எண், பயிர் சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சிறப்பு பருவம்
2021-22ம் ஆண்டிற்கான நெல் II (சம்பா) பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய 15.11.2021 கடைசி
தேதி ஆகும். எனவே விவசாயிகள் அனைவரும் நெல் II பயிருக்கு 15.11.2021க்குள்ளும். மக்காச்சோளம்
II மற்றும் பருத்தி IIக்கு 15.12.2021க்குள்ளும் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு
கேட்டுகொள்ளப்படுகிறது.
எனவே, விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் II, மக்காச்சோளம் II, பருத்தி II சிறப்பு பருவத்திற்கு உரிய தேதிகளுக்குள் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொள்கிறார்.
கடைசி தேதியில் அதிக அளவில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய
வருவதால் ஏற்படும் கடைசி நேர நெருக்கடியை தவிர்ப்பதற்காக விவசாயிகள் கடைசி தேதிக்கு
முன்னரே பயிர் காப்பீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
மேலும் படிக்க....
தொடர் மழையிலிருந்து நெல் விதைப்பண்ணை வயல்களை பாதுகாத்திட ஆலோசனை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...