நெல்லில் மஞ்சள் கரிப்பூட்டை நோய் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!



நெல்லில் மஞ்சள் கரிப்பூட்டை நோய் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!


நெல்லில் மஞ்சள் கரிப்பூட்டை நோய் மேலாண்மை முறைகள் குறித்து, சேலம், வேளாண் அறிவியல் நிலையம், மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), செ.சுகன்யா கண்ணா, இரா.ஜெகதாம்பாள், ம.மலர்கொடி ஆகியோர் தெரிவித்தனர்.


மஞ்சள் கரிப்பூட்டை தாக்குதலின் அறிகுறிகள்


1. ஒவ்வொரு தனி தானியமும் மஞ்சள் நிற கனியுடலாக மாற்றம் அடைந்து காணப்படும்.


2. நோய் தாக்கப்பட்ட தானிய நெல்லில் மென்பட்டுத் துணி போன்ற தோற்றத்தடன் பச்சையான கருப்பு நிற நெற்பழ உருண்டைகள் காணப்படும்.


3. முதலில் இந்த உருண்டைகள் மகவும் சிறியதாகவும் பின் வளர்ச்சியடைந்து 1 செ.மீ அளவு வரை பெரிதாகிறது.



4. இவை நெல் உமிக்களுக்கிடையே காணப்படும் பூப்பகுதிகளை சுற்றியும் காணப்படும். கதிரிலிருந்து சில தானியங்கள் மட்டுமே தாக்கப்பட்டிருக்கும் மற்ற அனைத்து நல்ல மணிகளாகவே இருக்கும்.


5. பூசண வளர்ச்சி தீவிரமாகும் போது, நெற்பழ உருண்டைகள் வெடித்து ஆரஞ்சு நிறமாக மாறி பின் மஞ்சளான பச்சை அல்லது கரும்பச்சை நிறத்திலும் மாறிவிடுகிறது.


6. பொதுவாக இனப்பெருக்க நிலை மற்றும் பயிர் முதிர்ச்சி நிலைகளில் இந்நோய், தாக்கப்ட்டு கதிரிலுள்ள சில தானியங்களை மட்டும் தாக்கி மற்ற தானியங்களை நல்ல தானியங்களாகவே விட்டு விடுகின்றன.


நோய் வளர்ச்சிக்கு சாதனமாக நிலைகள்


1. மழை மற்றும் அதிக ஈரப்பதம்.


2. அதிக தழைச்சத்துத் தன்மை கொண்ட மண்.


3. அதிக காற்று இரப்பதினால், ஒரு பயிரிலிரந்து மற்றொரு பயிருக்கு பூசண வித்துக்கள் எளிதில் பரவுகின்றன.


4. இழை முடிச்சுகள் மற்றும் இழைவித்துக்களைப் போல் பூசணங்கள் குளிர்காலத்தில் உயிர் பிடித்திருத்தல்.


5. பாதிக்கப்பட்ட தாவரம் மஞ்சள் நிறகனியுடல் தானியத்தில் பூஞ்சை தொகுப்பு.



நோய்க் காரணி


பூசண வித்து உருண்டைகளில் பூசண இழை வித்துக்கள் உருவாகும். சிறிய பூசண வித்துக்காம்புகளின் மேல் பக்கவாட்டில் உருவாகிறது. பூசண இழைவித்துக்கள் உருளை வடிவத்திலிருந்து நீள் உருளைவடிவமாகவும், பரு போன்றும் 3-5 x 4-6 மீட்டர் அளவிலும் காணப்படும். இளம் பூசண வித்துக்கள் சிறியதாகவும், நிறம் வெளுத்தும் மென்மையாகவும் இருக்கும்.


சில பச்சை பூசண வித்து உருண்டைகள் ஒன்று முதல் நான்கு இழை முடிச்சுகளை உருவாக்குகிறது. இவ்விழை முடிச்சுக்கள் வயலில் குளிர்காலத்தில் நன்கு உயிர்பிடித்து தொடரும் கோடைக்காலத்தில் அல்லது இலையுதிர்க்காலத்தில் காம்புடைய பாய் பூசனத்தை உருவாக்குகிறது.


பூசண இழை முடிச்சுகளில் இருந்து உருவாகும் இழை வித்துகள் தான் முதன்மை நிலை தாக்குதலை உருவாக்குகிறது எனக் கண்டறியப்படுகிறது.


இரண்டாம் நிலை நோய் தாக்குதலில் உறக்க நிலை பூசண இழை வித்துக்கள் நோய்ச் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


கட்டுப்பாடு


1. நோயைத் தாங்கக் கூடிய அல்லது எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களைப் பயன்படத்துதல் வேண்டும்.


2. நெற்பயிர்கள் ஈரமாக இருக்கும்போது வயலில் உழவியல் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.



3. தாமதமாகப் நடப்பட்ட பயிர்களைக் காட்டிலும் முன் நட்ட பயிர்களில் குறைந்த நெற்பழ உருண்டைகளே காணப்படுகின்றன.


4. அறுவடையின்போது நோய் தாக்கப்பட்டச் செடிகளை அகற்றி அழித்து விட வேண்டும்.


5. மாற்று பயிர்களை அழிப்பதற்கு, வயல் வரப்புகள் மற்றும் பாசன வாய்க்கால்களை சுத்தமாக வைத்தல் வேண்டும்.


6. மிகுதியான தழைச்சத்து உரம் அளித்தலை தவிர்க்க வேண்டும்.


7. குளிர்ப்பருவத்தில் நோய்த் தாக்கத்தை முறையாகக் கண்காணிப்பது மிகவும் அவசியம்.


8. வைக்கோல் மற்றும் பயிர்த்தூர்களை அகற்றி அழித்தல் வேண்டும்.


9. நோயற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.


10. ஒரு கிலோ விதைக்கு 2.0 கிராம் என்றளவில் கார்பன்டசிம் உடன் விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.


பூச்சிக்களைக் கட்டுப்படுத்துதல்


தழைச்சத்து உரத்தை பிரித்து அளிக்க வேண்டும். நோய் தாக்கப்பட்ட பயிர் தூர்களை அகற்றி அழிக்க வேண்டும். கதிர் இலைப்பருவம் மற்றும் பால் பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு காப்பர் ஆக்சிஃகுலோரைடு 2.5 கிராம்/லிட்டர் அல்லது பிரோபிகோனசோல் 3 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்க வேண்டும்.


இரசாயன முறை


கார்பென்டசிம் (2.0 கிராம்/கிலோ விதை) என்றளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். கதிர் இலைப்பருவம் மற்றும் பால்பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு ‘‘காப்பர் ஆக்சிஃலோரைடு 2.5 கிராம்/லிட்டர்’’ அல்லது ‘‘ப்ரோபிகோனசோல்’’ 1.0 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்க வேண்டும். 


தூர்விடும் பருவம் மற்றும் பூத்தல் முன் பருவங்களிலும் ஹெக்சாகோனசொல் 1 மிலி/லி மற்றும் குளிரோதனோனில் 2 கிராம் / லி பூசணக் கொல்லிகளை தெளிக்க வேண்டும்.



மேலும் விவரங்களுக்கு, சேலம், சந்தியூர், வேளாண்மை அறிவியல் நிலையம், திட்ட ஒருங்கிணைப்பாளரை 0427 242 2550, 90955 13102, 70109 00282 என்ற எண்களில தொடர்பு கொள்ளலாம்.

 

மேலும் படிக்க....


தரமான நெல் விதை உற்பத்தி செய்திட கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்!!


கனமழையிலும் செழித்து வளரும் நிலக்கடலை! கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி!!


விவசாயிகளுக்கு “ஷாக்” கொடுத்த மத்திய அரசு! PM Kisan அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments