தரமான நெல் விதை உற்பத்தி செய்திட கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்!!

 


தரமான நெல் விதை உற்பத்தி செய்திட கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்!!


வரிசை நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி முறையினை பின்பற்றி நடவு செய்திட வேண்டும். தூர் கட்டும் பருவத்திற்கு முன் நீரினை வடித்திட வேண்டும். தூர் கட்டும் பருவம் முதல் முறையாக நீர் பராமரித்திட வேண்டும். 


பூக்கும் மற்றும் பால்பிடிக்கும் சமயத்தில் நீர் தட்டுப்பாடு கண்டிப்பாக இருக்கக் கூடாது. களைகளை கையினாலோ அல்லாது கோனோவீடர் கருவி பயன்படுத்தி நட்ட 30-35 நாட்களுக்குள் எடுப்பது அவசியம்.



மண் பரிசோதனைப்படி உரமிடுதல் வேண்டும் அல்லது பொது பரிந்துரைப்படி தூர் கட்டும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் பால்பிடிக்கும் சமயத்தில் பிரித்து இடுதல் வேண்டும்.


கலவன் அகற்றுதல்


கலவன் அகற்றுதல் பணி விதை உற்பத்தியின்போது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பணி.


பூக்கும் முன்


அதிக உயரம் மற்றும் மிகவும் குட்டையான செடிகளை நீக்குதல் வேண்டும்.


பூக்கும் தருணத்தில்


முன்னதாக பூக்கும் செடிகள், காலதாமதமாக பூக்கும் செடிகள், மீசை நெல் மற்றும் சிகப்பு பொட்டு நெல் ஆகிய செடிகளை நீக்குதல் வேண்டும்.



அறுவடைக்கு முன்பு  


விதைப்பயிர் மணியின் பருமனுக்கு ஒத்து பார்த்து அதைவிட பருமனாகவோ அல்லது சன்னமாகவோ உள்ளவற்றை நீக்க வேண்டும்.


குறிப்பிட்ட நெல் இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டு தெரிகிற எல்லா தூர்களையும் களை செடிகளையும் மற்றும் நோய் வாய்ப்பட்ட பயிர்களையும் நீக்க வேண்டும்.


கலவன் செடிகளை வேரோடு களைந்தெறிய வேண்டும். பூக்கும் போது தொடர்ந்து 2 முதல் 3 முறை அதிகாலையில் கலவன்களை அகற்றும் பணியினை மேற்கொண்டால் கலவன்களை எளிதில் கண்டறிய முடியும்.


அறுவடை


90 சத விதைகள் பொன்னிறமாக மாறிய பிறகு அறுவடை மேற்கொள்ளலாம். அறுவடையின்போது, மணிகளின் ஈரப்பதம் 15 முதல் 20 சதத்திற்குள் இருத்தல் வேண்டும். அறுவடை முடிந்த உடன் விதைகளை உடனடியாக உலர்த்துதல் அவசியம். உலர்த்தும் போது களத்தில் வேறு நெல் விதைகள் இருக்கக் கூடாது. காலை 8-12 மணி வரையிலும். 



மாலை 3-5 மணி வரையிலும் வெய்யிலில் உலர்த்த வேண்டும். உலர்த்தும் போது அடிக்கடி கிளறி விட வேண்டும். விதை நெல்லை 13 சதவீத ஈரப்பதத்திற்கு கீழ் உலர்த்தி, பதர்கள் மற்றம் பயிரின் பாகங்களை நீக்கி சுத்தம் செய்து, புதிய சாக்குகளில் நிரப்பி சுத்தி நிலையத்திற்கு அனுப்பிட வேண்டும்.


எனவே, விதை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தரமான விதை நெல் உற்பத்தி செய்திட மேற்கூறிய தொழில் நுட்பங்களை தவறாமல் கடைப்பிடித்து விதை நெல் உற்பத்தி செய்து அளித்து, தாங்களும் பயனடைந்து, இதர விவசாயிகளும் பயன்பெறலாம் என இராமநாதபுரம் மாவட்ட, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சீ.சக்திகணேஷ் தெரிவித்தார்.

 

மேலும் படிக்க....


இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!!


பருவமழையால் வரப்பை 4 அடி உயர்த்தி மழைநீரைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!!


மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் விவசாயிகள் பயன் பெற வேளாண்துறை அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments