ஒரு விவசாயிக்கு 2 வேளாண் எந்திரங்களுக்கு ரூ.40 லட்சம் மானியம்! உடனே முந்துங்கள்!!
ஈரோடு மாவட்டத்தில்
மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் பெற ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேளாண் எந்திரங்கள்
இதுகுறித்து
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது,
வேளாண்மை எந்திரமயமாக்கும்
திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு
மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் முன்பதிவு
இந்த திட்டத்தின்
கீழ் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து, மத்திய அரசின்
www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தின் மூலம் டி.பி.டி. வழி முறைகளின் படி மானியம்
பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் Rs.40 லட்சம்
ஒதுக்கீடு
அந்த வகையில்,
ஈரோடு மாவட்டத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை
மானியத்தில் பெற்றிட ஏதுவாக ரூ.40 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 50 எந்திரங்கள் மற்றும்
கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
புதிய விண்ணப்பம்
அவசியம்
2020-2021-ம்
ஆண்டில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
எனவே இந்த ஆண்டிற்கு விண்ணப்பங்கள் உழவன் செயலியில் பதிவு செய்து தொடர்ந்து மத்திய
அரசின்
www.agrimachinery.nic.in
என்ற இணையதளம் மூலமாக புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு விவசாயிக்கு 2 எந்திரங்கள்
விவசாயிகள்
தங்களுக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களைத் தேர்வு செய்துப் பயன் பெறலாம்.
ஒரு நிதி ஆண்டில் விவசாயிகள் தனக்குத் தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது
கருவிகளை மட்டுமே மானிய விலையில் பெற இயலும்.
10 ஆண்டுகளுக்குப்
பிறகு
அடுத்த 10 ஆண்டுகளுக்கு
பின்னர் தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் பெற முடியும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
கூடுதல் விபரங்களுக்கு
மேலும் விவரங்களுக்கு
0424-2270067 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
பயிர் சுழற்சி மூலமாக வருமானம் எப்படி அதிகரிக்கும்? வேளாண் விஞ்ஞானிகள் அறிவுரை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...