தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக் காய்களுக்கான விலை உயர வாய்ப்பு!! விலை முன்னறிவிப்பு!!


விவசாயிகள் தங்கள் நடவு மற்றும் விற்பனை முடிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வழங்குகிறது. தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கின்றது.



தக்காளி


வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54 இலட்சம் ஹெக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.17 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். 


தற்போது கோவை மொத்தவிலை சந்தைக்கு தக்காளி அதன் சுற்றுவட்டார கிராமங்களான கிணத்துக்கடவு, சாவடி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், உடுமலைபேட்டை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியிலிருந்து வருகின்றது. 


வர்த்தக மூலங்களின்படி, கடந்த பருவத்தின் விலை குறைவு காரணமாகவும், பருவமழை மற்றும் காலநிலை மாற்றத்தினாலும் தக்காளியின் வரத்து குறைவாக இருப்பதால் பற்றாகுறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றறியப்படுகிறது.



கத்திரி


வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), கத்திரி 0.24 இலட்சம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.12 இலட்சம் டன்கள் உற்பத்திசெய்யப்படுவதாக அறியப்படுகிறது. தமிழகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் வேலூர்ஆகிய மாவட்டங்களில் கத்திரி அதிக அளவில் உற்பத்தி செய்யபடுகின்றது. 


வர்த்தக மூலங்களின்படி, தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி மற்றும் கர்நாடக மாநிலம் மைசூருலிருந்து வருகின்றது.


வெண்டை


வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), வெண்டை 0.25 இலட்சம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 2.14 இலட்சம் டன்கள் உற்பத்திசெய்யப்படுவதாக அறியப்படுகிறது. தமிழகத்தில், சேலம், தேனி, தர்மபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வெண்டை அதிகளவில் உற்பத்தி செய்யபடுகின்றது. 



வர்த்தக மூலங்களின்படி, தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு வெண்டைவரத்தானது மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் மற்றும் போளுவாம்பட்டி பகுதிகளிலிருந்து வருகின்றது.


விலை முன்னறிவிப்பு திட்டக்குழு, ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்பத்தூர் சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. 


பொருளாதார ஆய்வு முடிவின்படி, அறுவடையின் போது (மார்ச் – ஏப்ரல் 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.21 முதல் 23 வரை, நல்ல தரமான கத்திரியின் விலை ரூ.23 முதல் 25 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் விலை ரூ.22 முதல் 24 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. 


மேலும் நீடிக்கும் பருவ மழையினால் சந்தைக்கு வரத்து குறையும் என்பதினால் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003. தொலை பேசி – 0422 – 2431405.


இயக்குனர் மற்றும் முனை அதிகாரி, தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம், நீர் நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003, தொலைபேசி – 0422-6611278.


தொழில் நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003, தொலைபேசி-0422-6611374.



மேலும் படிக்க....


ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!


பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்! குவிண்டாலுக்கு அதிக பட்சம் எவ்வளவு!!


சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக் கருவிகள் விநியோகம் பயன்பெற அழைப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post