ஆதார் இணைப்பை உறுதி செய்தால் மட்டுமே PM கிசான் 13வது தவணை வேளாண் இணை இயக்குனர் அறிவுரை!!


PM கிசான் 12வது தவணை வரை உதவித்தொகை பெற்ற அனைத்து விவசாயிகளும் இ கே ஒய் சி (e-KYC) செய்வது மிக மிக அவசியம். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் அறிவுரை PM கிசான் திட்டத்தில் விவசாயிகள் இதுவரை 12 வது தவணை வரை பெற்றுள்ளனர். 


விவசாயிகள் 12வது தவணை வரை பெற்றிருந்தாலும் இ கே ஒய் சி (e-KYC) எனும் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பை உறுதி செய்தால் மட்டுமே அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த தவணைத் தொகை ஏற வாய்ப்புள்ளது. அதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இ கே ஒய் சி (e-KYC) செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 



இதனைத் தொடர்ந்து சென்னை வேளாண் இயக்குனர் அவர்களின் ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர்  அனைத்து வேளாண் உதவி இயக்குனர்களும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் PM கிசான் பயனாளிகளை  நேரடியாக தொடர்பு கொண்டு பொது சேவை மையத்தின் உதவியுடன் 100% பணியை முடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். 


இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் உதவி இயக்குனர் வேளாண் துணை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் சுரேஷ், தினேஷ், ஜெரால்ட் மற்றும் முருகேஸ் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜானகிராமன் மற்றும் கண்ணன் அடங்கிய குழுவினர் ஆர் வி எஸ் வேளாண் கல்லூரி தஞ்சையில் இருந்து கிராமப்புற பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள 11 மாணவர்களின் உதவியுடன் அனைத்து விவசாயிகளையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வரவழைத்து மதுக்கூர் பொது சேவை மைய தலைவர் திரு மணிகண்டன் மூலம் 250 விவசாயிகளுக்கு இ கே ஒய் சி (e-KYC) பணியினை முடித்துள்ளனர். 



இ கே ஒய் சி (e-KYC) வேளாண்மை இணை இயக்குனர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அனைத்து வேளாண் உதவி அலுவலர்களும் நாள் ஒன்றுக்கு தலா ஐம்பது PM கிசான் பயனாளிகளை இ கே ஒய் சி (e-KYC) செய்து முடித்திட அறிவுறுத்தினர்.


எனவே மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த PM கிசான் உதவித்தொகை பெறும் அனைத்து விவசாயிகளும் இதுவரை இ கே ஒய் சி (e-KYC) செய்யவில்லை எனில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அவரவருடைய ஆதார் நகல் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன் வருகை புரிந்து மதுக்கூர் வட்டார அங்கீகரிக்கப்பட்ட ஜெயராஜ் பொது சேவை மையத்துடன் இணைந்து நடைபெறும் முனைப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு இ கே ஒய் சி (e-KYC) பணியை முடித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.



வேளாண் உதவி அலுவலர்களிடம் இருந்து தங்களுக்கு இ கே ஒய் சி (e-KYC) செய்திட தகவல் வந்தாலும் வராவிட்டாலும் விவசாயிகள் நேரடியாக வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து இ கே ஒய் சி (e-KYC) செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இ கே ஒய் சி (e-KYC) செய்பவர்களுக்கு மட்டுமே அடுத்த கட்ட தவணை மத்திய அரசால் வரவு வைக்கப்படும் என்பதை அனைவரும் கவனத்துடன் பரிசீலித்து உடன் இப்பணியை முடிக்க மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டார்.


இன்றைய தினம் PM கிசான் முனைப்பு இயக்கத்தில் ஆர்விஎஸ் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் ஜோதீஸ்வரன், கபிலன், காமேஷ், குமார், கார்த்திகேயன், கவிமணி, லோகமூர்த்தி, லோகேஸ்வரன், முகமது ஹக், முகமது இப்ராஹிம், முத்துமணி, முத்துவேல் உள்ளிட்ட மாணவர்கள் விவசாயிகளை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தனர். அட்மா திட்ட  அலுவலர்கள் சுகிர்தா ஐயாமணி ராஜு ஆகியோர் உடன் இருந்தனர்.



மேலும் படிக்க....


வாழை சாகுபடியில் நல்ல மகசூல் ஈட்ட கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள்!!


PM கிசான் திட்டத்தில் 13வது தவணை பெற ஆதாரை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்! ஒன்றிய அரசு அறிவிப்பு!!


தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post