உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் உள்ளிட்ட குழுவினர் சிறப்பு திடீராய்வு!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டார உர விற்பனை மையங்களில் வேளாண் உதவி இயக்குனர் உள்ளிட்ட குழுவினர் சிறப்பு திடீராய்வு காவேரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் 12-6-23 அன்று மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டு குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா டிஏபி பொட்டாஸ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் பிரதி மாதம் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு போதுமான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் தனியார் உர விற்பனையாளர் களிடமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்திடவும் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்வோர் உரம் கடத்தல் அல்லது பதுகளில் ஈடுபடுவோர் மற்றும் வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கு உரம் விற்பனை செய்தல் ஆகிய சட்டத்துக்கு புறம்பான செயல்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திடும் நோக்கிலும் காவேரி பாசன மாவட்டங்கள் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் வட்டாரங்களில் பணிபுரியும் வேளாண்மை துறை அலுவலர்களைக் கொண்டு சிறப்பு ஆய்வு குழு அமைத்து வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்கள் உத்தரவினைத் தொடர்ந்து மதுக்கூர் வட்டாரத்திலும் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் பத்து தனியார் உர விற்பனை நிலையங்களிலும் சிறப்பு ஆய்வு வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உள்ளிட்ட குழுவினர் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் குறுவை சாகுபடி தற்போது துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பமின்றி கூடுதல் பொருள்களை வழங்கக் கூடாது அரசு அனுமதித்த விலைக்கு அதிகமாக விலையில் விற்பது தெரிந்தால் உர விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் விவசாயிகளுக்கு தெரியும் வகையில் உரங்களின் இருப்பு மற்றும் விலையை குறித்து விபரப்பலகை வைப்பதோடு மட்டுமின்றி தினசரி அதனை பதிவு செய்திடவும் உர விற்பனையாளர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய செல்பேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உர இருப்பு மற்றும் அனைத்து உரங்களின் அரசு நிர்ணயித்த விலை மற்றும் விதைகள் அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு நிலை அனைத்து துறை திட்டங்களின் மானிய விபரங்கள் முன்னுரிமையில் பதிவு செய்து பெறுவது போன்ற நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் தெரிவித்தார் மேலும் விவசாயிகள் உர விற்பனை நிலையங்கள் குறித்து ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.
இளங்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் குருவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது வேளாண் உதவி இயக்குனர் மதிப்பு ஆய்வு செய்தார்.
வீரனார் ஏஜென்சி பழவேரிக்காடு தனியார் உர விற்பனை நிலையத்தில் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் உரஇருப்பு விபரங்களை ஆய்வு செய்தார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
வரும் வாரங்களில் பருத்தி விலை விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!!
விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...