நுண்ணீர் பாசன திட்டத்தில் 100% மானியம் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை அலுவலர் அறிவுரை!!


வேளாண்மை துறையின் கீழ் செயல்படும்  அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா மோகூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்  மோகூர் கிராமத்தை சார்ந்த நூறு விவசாயிகள் கலந்து கொண்டனர் . வேளாண்மை துணை அலுவலர் திரு.அன்புமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

 





கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி .எஸ் .திலகவதி அவர்கள் அறிவுரையின்படி தேவையற்ற மின் பயன்பாட்டினை தவிர்த்திடுமாறும் , தொடர்ந்து ஒரே பயிர் சாகுபடி செய்வதனை தவிர்த்து நெல்லுக்குப் பின் உளுந்து , எண்ணெய் வித்து பயிர்கள், சிறு தானிய பயிர்கள் ஆகியவற்றினை சாகுபடி செய்வதனால் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது, மற்றும் தண்ணீர் பயன்பாட்டினை மேம்படுத்தும் விதமாக தற்சமயம் அரசால் வழங்கப்படும் சிறு விவசாயிக்கான 100 சத மானியம் மற்றும் பெரிய விவசாயிக்கான 75% மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை அலுவலர் திரு. இளங்கோவன் அவர்கள் கேட்டுக்கொண்டார். 


உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பேராவூரணி திரு.துறைசெல்வம்., எம். டி அவர்கள் அவர்கள் பேசுகையில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்து சாகுபடி தொழில்நுட்பத்தினையும் எடுத்துக் கூறினார்.



அவர்களது உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள உலர் கூடாரம் அமைத்தல் மற்றும் அதன் மூலம் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்து தெரிவித்தார்.  


வட்டார தொழில்நுட்ப மேலாளர்  திருமதி. சி.சுகிதா பேசுகையில் தென்னைக்கு உரமிடுதல் மற்றும் பூச்சி மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் இயற்கை முறையில் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும்  தேவைக்கேற்ப  உர பயன்பாட்டினை பயன்படுத்துமாறும் மண்வள அட்டையில் அடிப்படையில் உரத்தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 



உழவர் வயல் தின விழாவில் நெல் மதிப்பு கூட்டு பொருள்கள்  ,பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானிய வகைகள் மேலும் உயிர் உரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 


பயிற்சி நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர் திரு.பூமிநாதன் அவர்கள் விவசாயிகளுக்கு நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. ராஜு மற்றும் திரு. அய்யாமணி ஆகியோர் செய்திருந்தனர்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பவர் ஸ்பிரேயர் மற்றும் பண்ணைக் கருவிகள் தொகுப்பு வழங்கும் சிறப்பு முகாம்!!


வரும் வாரங்களில் பருத்தி விலை விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!!


விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post