ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு குடல் புழு நீக்க மருந்து மற்றும் தென்னங் கன்றுகள் வழங்கும் முகாம்!!


தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300  குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங் கன்றுகள் மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் இந்த நிதியாண்டில் 7 பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 



அதில் இன்றைய தினம் தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. 


மேலும் அட்மா திட்டத்தின் கீழ் தனிக்கோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் கால்நடைத்துறையை சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர் இளவரசி அவர்கள் மூலம் நடத்தப்பட்டது. 



60 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து சத்து மாத்திரை மற்றும் உன்னி நீக்க மருந்துகள் 100% மானியத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் இளங்கோ மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி வேளாண்மை உதவி அலுவலர் ராமு ஆகியோர் விவசாயிகளின் திட்ட வாரியான தேவைகளை பதிவு செய்து தென்னங்கன்றுகளை வழங்கினர். 


அட்மாதிட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு அய்யா மணி ஆகியோர்  குடல் புழு நீக்க கால்நடை மருத்துவ முகாமுக்கு ஆன ஏற்பாடுகளை செய்திருந்தனர் . மேலும் இன்றைய தினம் 11 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளின் தொகுப்பு உதவி விதை அலுவலர் இளங்கோ மற்றும் கலையரசன் மூலம் பதிவு செய்து 50% மானியத்தில் வழங்கப்பட்டது. 



பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் இளமாறன் முன்னுரிமைக்கு பதிவு செய்யாத விவசாயிகளை உழவர் செயலியில் பதிவு செய்து உதவினார். அட்மாதித்த அலுவலர்கள் விவசாயிகளுக்கு உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் நன்மைகள்  குறித்து எடுத்துக் கூறினர். 


கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் அண்ணாதுரை ஜெயமணி சக்திவேல் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி நடப்பு நிதியாண்டில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அதன் மானிய விகிதம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறி கலந்து கொண்ட அனைவருக்கும் தம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விவசாயிகளின் மண் மாதிரிகள் தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு மண்வள செயலியில் நேரடியாக பதிவேற்றம்!!


குறுவை சாகுபடி செய்யும் பரப்பினை அதிகரிக்க விவசாயிகளுக்கு 100% மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் உரம்!!


குறுவை சாகுபடி குறித்து விவசாயிகளின் வயல்களில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post