மாநில மேலாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை இயற்கை விவசாயிகள் குழுவுக்கு லட்ச ரூபாய்க்கு சுழல் நிதி!!
மாநில மேலாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஒரு லட்ச ரூபாய்க்கு சுழல் நிதி வழங்கினார். தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை விவசாய இடுபொருட்கள் உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் உயர் அலுவலர்களின் கண்காணிப்புக்கு பின் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அளவில் சுழல் நிதி இயற்கை இடுபொருட்களை பிற விவசாயிகளுக்கும் விற்பனை செய்வதற்காக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதல்படி மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம்ஈஸ்வர் மற்றும் மாநிலதிட்டம் சுஜாதா ஆகியோரின் அறிவுரைப்படி அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு அமுத கரைசல் ஜீவாமிர்த கரைசல் மீன் அமினோ அமிலம் மூலிகை பூச்சி விரட்டி போரான் எருக்கு கரைசல் பஞ்சகவ்யா மண்புழு உரம் போன்றவைகளை தயாரித்து தற்சார்பு முறையில் குழுவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் இயற்கை இடுபொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்து பிறகு விவசாயிகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் குழு காண வருமானத்தையும் அதிகரிக்க செய்ய வேண்டும் அதிக விவசாயிகளை இயற்கையை விவசாய முறை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் ஊக்கப்படுத்தும் விதமாக ரூபாய் ஒரு லட்சம் சுழல் நிதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மூலம் இன்றைய குடியரசு தினத்தன்று தலைவர் வைரவமூர்த்தி பொருளாளர் வடிவேல் மூர்த்தி செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கான சுழல் நிதியினை வழங்கினார்.
வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா மற்றும் வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் சுஜாதா குழு உறுப்பினர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு இயற்கை இடுபொருள்களை அதிகளவில் விற்பனை செய்திட கேட்டுக் கொண்டனர்.
வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் அத்திவெட்டி இயற்கை விவசாயிகள் குழுவினை செயல்படுத்திட அவர்களின் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.இன்றைய நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் உதவிவேளாண்அலுவலர் சுரேஷ் உடனிருந்தனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!
கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!
விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...