அட்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா!!

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திறள் பெருவிழா வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா ஒலையகுன்னம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இக்கிராமத்தை சார்ந்த நூறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.


இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ,மதுக்கூர் திருமதி.எஸ்.திலகவதி அவர்கள் நெல் மற்றும் உளுந்து ஆகிய பயிர்களை நேரடியாக விற்பனை செய்யாமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை வெகுவாக உயர்த்த முடியும் எனவும், மேலும் அதற்கு கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் இயற்கையான முறையில் பயிர் சாகுபடி செய்திட இயற்கை இடுபொருட்களான மீன் அமினோ அமிலம், அமிர்த கரைசல்,ஜீவாமிர்த கரைசல் மற்றும் இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை பயன்படுத்தி மண் தரத்தினை மேம்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்திட கேட்டுக்கொண்டார்.


வேளாண்மை அலுவலர் திரு .சரவணன் அவர்கள் உளுந்து சாகுபடி தொழில்நுட்பத்தினை காணொளி வாயிலாக விவசாயிகளிடம் காண்பித்து விளக்கம் அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா அவர்கள் டிவிரிடி மற்றும் சூடோமோனஸ் போன்ற உயிர் பூஞ்சால கொல்லிகளின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்தும், திரவ உயிர் உரங்கள் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட நூறு விவசாயிகளுக்கும் டிவிரிடி மானியத்தில் வழங்கப்பட்டது.


பயிற்சிக்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் திரு. முருகேஷ், அட்மா திட்ட அலுவலர்கள் திரு. அய்யாமணி மற்றும் திரு .ராஜு ஆகியோ செய்திருந்தனர்.பயிற்சியில் விவசாயிகளுக்கு எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உளுந்து சாகுபடி மற்றும் பூச்சிநோய் மேலாண்மை குறித்த கருத்துக்காட்டியும் ஏற்பாடு வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு மாநில திட்டங்கள் குறித்து கருத்துக்காட்சியில் விளக்கிக் கூறினார்.



பயிற்சி நிறைவாக சமுதாய வள அலுவலர் ஒலயகுன்னம் ரம்யா அக்ரிஸ்டேக் என்னும் விவசாயிகள் பதிவு பற்றி மகளிர் உறுப்பினர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வேளாண் உதவி இயக்குனர் பயிர் பாதுகாப்பு காலண்டரை முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கினார்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!


வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!


விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post