PM Kisan விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ₹2000!!  மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்...!!


4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000


பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.


விவசாயிகளுக்கு நல்ல செய்தி


பிரதமர் கிசான் யோஜனாவின் பயனைப் பெறும் விவசாயிகளுக்கு நல்ல செய்தி. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 9 வது தவணையை  மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் வழங்கலாம். பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, தகுதியான பயனாளிகளின் பட்டியலுடன் அரசாங்கம் தயாராக உள்ளது



எனவே விரைவில் விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரும்.  எனவே அனைத்து பயனாளிகளும் தங்கள் வங்கி கணக்கு நிலையை சரிபார்த்து, அவ்வப்போது பட்டியலிட வேண்டும் - அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது PM கிசான் மொபைல் செயலி மூலமும் இதனை செய்யலாம்.


இதுவரை 8 தவணைகள் வழங்கியுள்ளது


இந்தத் திட்டத்தில் இதுவரை 8 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் 9வது தவணை எப்போது செலுத்தப்படும் என்பதை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.


9வது தவணையாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல்


கிசான் திட்டத்தின் 9வது தவணை குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 9வது தவணையாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி 2000 ரூபாய் செலுத்தப்படும் என தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் வரையில் 68.76 கோடி பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


கிசான் திட்டத்தின்  மொத்த பரிமாற்றங்கள்


ஜூன் 30ம் தேதி வரை மொத்தமாக 68,76,32,104 பரிமாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், மொத்த பரிமாற்றங்களில் தோல்வியடைந்த பரிமாற்றங்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாகவும் தோமர் கூறினார்.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


9 வது தவணை யாருக்கெல்லாம் கிடைக்கும்


2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுடையவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தவணைகள் எப்போதெல்லாம் கிடைக்கும்


பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வருடந்தோறும் 4 மாதங்களுக்கு ஒரு முறை என மொத்தம் 3 தவணையாக நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் முதல் தவணை ஏப்ரல் 1 - ஜூலை 31 காலகட்டத்திலும், இரண்டாம் தவணை ஆகஸ்ட் 1 - நவம்பர் 30 காலகட்டத்திலும், மூன்றாம் தவணை டிசம்பர் 1 - மார்ச் 31 காலகட்டத்திலும் வழங்கப்படுகிறது.


PM கிசான் நிலையை சரிபார்க்க இவ்வாறு பின்பற்றவும்


உங்கள் நிலை மற்றும் கணக்கு விவரங்களைப் பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றுங்கள்


1. அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்திற்கு செல்லவும் - https://pmkisan.gov.in/


2. முகப்புப்பக்கத்தில் விவசாயிகள் பக்கத்தில், பயனாளி நிலையைப் பார்க்கவும்



3. பயனாளி நிலையைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் ஆதார் எண் அல்லது கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும் (நீங்கள் ஏதேனும் ஒன்றை மட்டும் உள்ளிட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்)


4. பின்னர் தரவைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்


5. நிலை திரையில் காட்டப்படும்


PM கிசான் மொபைல் செயலியைப் பதிவிறக்குவதன் மூலம், நீங்கள் சில நிமிடங்களில் பதிவுசெய்து, நிலையைச் சரிபார்க்கலாம், பட்டியலிடலாம் மற்றும் அனைத்து பிழைகளையும் சரிசெய்யலாம்


உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததா என எப்படி தெரிந்து கொள்வது?


1. பிரதமரின் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லுங்கள்


2. வலதுபுறத்தில் உள்ள ‘Farmers Corner’ என்பதை க்ளிக் செய்க


3. அதில் ‘Beneficiary Status’ என்பதை க்ளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும்


4. திறக்கப்படும் புதிய பக்கத்தில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் எல்லது மொபைல் எண் என ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்யவும்


5. பின்னர் ‘Get Data’ என்பதை க்ளிக் செய்க


இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததா? எப்போது கடைசியாக பணம் வந்தது என பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.



PM கிசான் சம்மன் நிதி நிலையை ஆஃப்லைனில் எவ்வாறு சரிபார்க்கலாம்


இதற்காக, நீங்கள் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்குச் சென்று திட்டத்தின் பொறுப்பான அதிகாரியைச் சந்திக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பிஎம் கிசான் ஹெல்ப்லைன் எண்களிலும் நீங்கள் அழைத்து விவரங்களைக் கேட்கலாம்;


011-23381092, 23382401, 18001155266


மேலும் படிக்க....


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post