Random Posts

Header Ads

ஜனவரி 30 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!!

 


ஜனவரி 30 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!!


தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். 


எந்தந்த மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு, எந்தந்த மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிந்துக்கொள்ள, கீழே படிக்கவும்.



இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில்: உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

 

ஜனவரி 26 மற்றும் 27


கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களான காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, சிவகங்கை, மதுரை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 


ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஜனவரி 28 வானிலை


தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்.

 


ஜனவரி 29 மற்றும் 30


தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை 


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில், மீனவர்களுக்கான எச்சரிக்கை

 

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ, வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு! வானிலை மையம் புதிய அறிவிப்பு!


2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, உர மானியத்தின் நிலவரம் என்ன?


மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை பசுமை உரம்! குறைந்த விலையில் விற்பனை செய்யத் திட்டம்!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments