Random Posts

Header Ads

உளுந்து குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூபாய் 63 நிர்ணயம்! நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்துடுவீர்!!


உளுந்து குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூபாய் 63 நிர்ணயம்! நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்துடுவீர்!!


தஞ்சையில் உளுந்து சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதை மற்றும் உயிர் உரங்கள் மதுக்கூர்  வட்டாரத்தில் வழங்கப்படுகிறது. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல்.


மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி 


500 எக்டர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தேவையான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. 


நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்ய ஆடுதுறை 5 மற்றும் வம்பன் 8 போன்ற ரகங்கள் ஏற்றவையாகும். ஏக்கருக்கு 8 கிலோ என்ற அளவில் கிலோவுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். 



மேலும் திரவ உயிர் உரங்களான ரைசோபியத்தினை விதை நேர்த்தி செய்வதன் மூலமும் மக்கிய உரத்துடன் கலந்து மண்ணுக்கு அளிப்பதன் மூலமும் உளுந்து பயிரில் அதிக வேர் முடிச்சுகள் உருவாகி காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கொடுக்கிறது. 



இதனால் விளைச்சல் அதிகரிக்கும். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் பயறு நுண்ணூட்டம் இடுவதால் அதிக பூக்கள் மற்றும் காய் பிடிப்பு திறன் உருவாகிறது. நெல் தரிசில் உரமிட முடியாத சூழல் இருப்பதால் ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் நீரில் முதல்நாள் ஊறவைத்து தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பூக்கும் தருணத்தில் 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதன் மூலம் அதிக காய் பிடிப்பு உண்டாகும். 



மேலும் தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் உளுந்து கொள்முதல் செய்திட அரசு திட்டமிட்டுள்ளது உளுந்துக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூபாய் 63 நிர்ணயம் செய்துள்ளது எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார். 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


இன்றைய தினம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமமான அத்திவெட்டியில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஆறு விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் உளுந்து விதைகளை வேளாண் துணை இயக்குனர் கோமதி தங்கம் அவர்கள் வழங்கியதோடு அத்திவெட்டி கிராமத்தில் உள்ள உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களையும் ஆய்வு செய்தார். 



தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்,

தஞ்சாவூர் மாவட்டம்.

வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா, ராஜு மற்றும் அய்யா மணி ஆகியோர் வயல் ஆய்வின் போது உடன் இருந்தனர்.


மேலும் படிக்க....


வேளாண் இ-வாடகை நடவு இயந்திரங்கள் மற்றும் அறுவடைக்கு தேவையான டிராக்டர் இயந்திரங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?


விவசாயிகளின் அடிப்படை விபரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு இடுபொருள் மானியத்தில் வழங்கல்!!


மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments