அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தது மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து பொருளாதாரத்தை பெருக்க ஆலோசனை!!


சூரிய கூடாரங்களை பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து பொருளாதாரத்தை பெருக்க ஆலோசனை!!


மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தல் குறித்த விவசாயிகள் பயிற்சி. மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு கிராமத்தில் முன்னோடி விவசாயியும் ஓய்வுபெற்ற நெய்வேலி தலைமை பொறியாளர் மான திரு. பால சுப்பிரமணியன் அவர்கள் கொப்பரைகளை  இயற்கையான முறையில் சூரிய கூடாரத்தை பயன்படுத்தி உலர்த்தி வருகிறார். 


மதுக்கூர் வட்டாரத்தில் தென்னை விவசாயிகள் அதிகமாக உள்ளதால் பிற விவசாயிகளும் இதனை அறிந்து தங்கள் கிராமங்களில் கூட்டுறவு முறையில் சூரிய உலர்த்தி கூடாரங்களை மானியத்தில் பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.



இப்பயிற்சியில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செங்கோல் சூரிய கூடாரங்களை பயன்படுத்தி விவசாய பொருட்களின் தரம் மாறாமல் இயற்கையான சூரிய ஒளியை பயன்படுத்தி உலர்த்துவதன் மூலம் பூஞ்சாண தாக்குதல் இன்றி எளிய முறையில் உலர்த்திட முடியும் என தெரிவித்தார்.




மேலும் விவசாயிகள் இந்த சூரிய கூடாரங்களை பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும் கேட்டுக்கொண்டார். தற்போது வேளாண் பொறியியல் துறை மூலம் 40 சத மானியத்தில் விவசாயிகளுக்கு சூரிய உலர்த்திகள் வழங்கப்பட உள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.



இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் அட்மா திட்ட அலுவலர் சுகிதா ஐயா மணி மற்றும் ராஜு ஆகியோர் செய்து இருந்தனர். விவசாயிகள் இப்பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர். 


காசாங்காடு பாலசுப்ரமணியன் அவர்கள் விவசாயிகளுக்கு தனது சொந்த அனுபவங்களை சூரிய உலர்த்தி கூடாரத்தில் நேரடியாக விளக்கிக் கூறி விவசாயிகளின் சந்தேகங்களை தெளிவு படுத்தினார். வேளாண் அலுவலர் சாந்தி கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார்.



தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு 2.5 ஏக்கருக்கு முற்றிலும் இலவசமாக 100% மானியத்தில் வேளாண் உபகரணங்கள்!!


PMFBY திட்டம் காரீஃப் பருவத்தில் வீடு வீடாகச் சென்று பதிலளிக்கும் அரசு!!


ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு! வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments