விவசாயிகளையும் விவசாயத்தையும் ஊக்குவிக விவசாயிகளுக்கு 8 வகை மானியம்!
நாட்டின் முதுகெலும்பு விவசாயம். எனவே விவசாயிகளையும் விவசாயத்தையும் ஊக்குவிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான மானியம் வழங்குகிறது.அதை விவசாயப் பெருங்குடி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
விவசாயிகளுக்கு 8 வகையான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அவை விதை மானியம், உரம் மானியம், நீர்ப்பாசன மானியம், மின்சார மானியம், ஏற்றுமதி மானியம், கடன் மானியம், விவசாய உபகரணங்கள் மானியம், விவசாய உள்கட்டமைப்பு மானியம் என 8 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து நன்கு தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும்.
விதை மானியம்
அதிக மகசூல் தரும் விதைகள் அரசு சார்பில் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய வளமான விதைகளை உருவாக்க தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்முறைகளுக்கான செலவு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தின் ஒரு பங்காகும்.
உரம் மானியம்
குறைந்த விலையில் இரசாயன அல்லது இரசாயனமற்ற உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிப்பதே, உரம் மானியம் எனப்படும். இது உரம் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் விலைக்கும் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம், உரத்தின் விலையில் விவசாயிகள் அளித்த தொகைக்கு பிறகு, மீதி உள்ள தொகையை அரசு ஏற்கிறது.
விவசாயிகளுக்கு மலிவான இடுபொருட்கள் கிடைப்பதையும், உர விலையில் ஸ்திரத்தன்மை. உற்பத்திக்கான நியாயமான லாபம், விவசாயிகளுக்கு தேவையான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.
நீர்ப்பாசன மானியம்
நீர்ப்பாசன மானியத்தின் கீழ், சந்தை விலையைவிட குறைந்த விலையில் அரசு நீர்ப்பாசன சேவைகளை வழங்குகிறது. இது பாசன வரைமுறைக்கான அரசின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கும் விவசாயிகள் செலுத்தும் பாசனக் கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
மின்சார மானியம்
மின்சார மானியங்கள் விவசாயிகளுக்கு அவர்கள் பெறும் மின்சாரத்திற்கு குறைந்த கட்டணத்தை அரசு வசூலிக்கிறது என்பதையேக் குறிக்கிறது. அரசின் மின்சார துறைகள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் இல்லையென்றால் NTPC மற்றும் NHPC போன்ற மின்சார நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கலாம்.
மின்சார மானியம் பம்ப் செட், ஆழ்துளை கிணறுகள், குழாய் கிணறுகள் மற்றும் பல நீர்ப்பாசன முறை போன்றவைகளில் முதலீடு செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கிறது.
ஏற்றுமதி மானியம்
இந்த மானியம் விவசாயிகளுக்கு உலக அளவில் போட்டியிட உதவுகிறது.இதன் காரணமாக, உள்நாட்டுப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்தாதவரை விவசாய ஏற்றுமதிகள் பொதுவாக ஊக்குவிக்கப்படுகின்றன. ஏற்றுமதி மானியங்கள் என்பது ஏற்றுமதியைத் ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் நிதிச் சலுகைகள் ஆகும்.
கடன் மானியம்
இது விவசாயிகளுக்கு வசூலிக்கப்படும் வட்டிக்கும் கடன் வழங்குவதற்கான உண்மையான செலவுக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். சிக்கல்களான கடன் தள்ளுபடி போன்ற பிற செலவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி பின்தங்கிய விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது ஒரு முக்கிய பிரச்சினை.
விவசாய உபகரணங்களை வாங்குவதற்கு அவர்களுக்கு நிதி இல்லை. தேவையான ஜாமீன் இல்லாததால் கடன் பெற அணுக முடியவில்லை. சாகுபடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்கள் உள்ளூரில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை சந்திக்க நேரிடுகிறது.
வேளாண் உபகரணங்கள் மானியம்
வேளாண்மை இயந்திரமயமாக்கலின் துணைத் திட்டம் (SMAM), ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய பணிகளுக்காக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் மானியமாக வழங்கப்படுகின்றன.
தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தின் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (NFSM) மூலம் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை ஆகிய வற்றுக்காக மானியம் வழங்கப்படுகின்றன.
விவசாய உள்கட்டமைப்பு மானியம்
விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கு, நல்ல சாலைகள், சேமிப்பு வசதிகள், மின்சாரம், சந்தை நுண்ணறிவு, துறைமுகங்களுக்கு போக்குவரத்து போன்றவை அவசியம். இந்த வசதிகள் பொதுப் பொருட்களின் வகையின் கீழ் உள்ளன.
அவற்றின் விலைகள் அதிகம். ஆனால், அவற்றின் பயன்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு உத்திரவாதமில்லாமல் ரூ.1.60 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?
இயற்கை முறையில் காட்டு பன்றிககளை விரட்டி அடித்து பயிர்களை பாதுகாப்பது எப்படி?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...