மருதாம்பு கரும்பில் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள்!!

 


மருதாம்பு கரும்பில் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாகுபடி குறிப்புகள்!!


அரியலூர் மாவட்டத்தில் 12,500 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக கரும்பு நடவு செய்த 11 முதல் 12 மாதங்களில் சர்க்கரையின் அளவை பொருத்து அறுவடை செய்யப்படும். அறுவடைக்கு பின்னர் வயலில் விடப்படும் கரும்பு தோகை பெரும்பாலான பகுதிகளில் எரிக்கப்பட்டு வருகிறது.


இதனால் சுற்றுசூழல், காற்று மாசுபடுவதுடன் மண்ணில் அங்கக சத்து குறைபாடு ஏற்பட்டு மகசூலில் இழப்பும் ஏற்படுகிறது. விவசாயிகள் சரியான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் முந்தையஆண்டு பெற்ற விளைச்சல் போன்றே தொடர்ச்சியான வருடங்களிலும் விளைச்சல் பெற முடியும்.



கரும்பு தோகையினை பொடியாக்கும் கருவி


அறுவடை செய்த வயல்களில் உள்ள தோகையினை எரிக்காமல் கரும்பு தோகையினை பொடியாக்கும் யந்திரத்தினை கொண்டு வயலில் தூளாக்கி இட வேண்டும். வெட்டிய கரும்பு தூர்களை கருவி கொண்டு நன்கு சீவ வேண்டும். பார் முறையில் நடவு செய்த வயல்களில் கூப்பர் கலப்பை கொண்டு பார் ஓரங்களில் உழவு மேற்கொள்ள வேண்டும்.

 

கரும்பு வெட்டப்பட்ட 30 நாட்களுக்குள் கரும்பு இல்லாத பகுதிகளில் மற்ற தூர்களில் முளைத்த கரும்பு பயிரை பெயர்த்து எடுத்து முளைக்காத இடத்தில் நடவு செய்ய வேண்டும் அல்லது பாலிதீன் பைகளில் வளர்க்கப்பட்ட கரும்பு நாற்றுகளை கொண்டு நடவு செய்ய வேண்டும். 



ஏக்கருக்கு 5 மெ.டன் மக்கிய தொழு உரங்கள் மற்றும் 250 கிலோ சூப்பர் பாஸ்பேட் போன்றவற்றை இட வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தில் 25 சதவீதத்தினை 5 முதல் 7 நாட்களில் இட வேண்டும். பெரஸ் சல்பேட் நுண்ணூட்டத்தினை ஏக்கருக்கு 1 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களில் தெளித்து வரலாம்.


இதனால் இரும்பு நுண்சத்து குறைபாட்டினால் ஏற்படும் வெள்ளை தோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். இக்குறைப்பாடு தொடருமானால் அடுத்த 15 நாட்களில் பெரஸ் சல்பேடினை தெளித்து வரலாம்.


 களையெடுத்தல் மற்றும் உர மேலாண்மை


கரும்பு வெட்டப்பட்ட 20 நாட்களுக்கு பின்னர் தவறாது களை எடுக்க வேண்டும். இதே போன்று 40 மற்றும் 50ம் நாட்களில் இரண்டாவது களை எடுக்க வேண்டும். முதல் மேலுரம் 25ம் நாளிலும் இரண்டாவது மேலுரம் 45-50 நாட்களுக்குள் கரும்புகளுக்கு இட வேண்டும். கடைசி உரமிடுதல் 70-75 நாட்களுக்குள் இட்டுவிட வேண்டும். 



கடைசி மண் அணைப்பு 90ம் நாட்களில் செய்ய வேண்டும். தோகை பிரித்தல் 120 மற்றும் 180 நாட்களில் செய்து முடிக்க வேண்டும். கரும்பு சாயாமல் இருக்க 180ம் நாட்களில் தோகையினை முறைப்படுத்த வேண்டும்.


தகவல் வெளியீடு


இத்தகவலை அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிசாமி தெரிவித்தார்.


மேலும் படிக்க....


தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் தகவல்!!


விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு SBI வங்கியில் வாங்குவது எப்படி?


விவசாயிகளுக்கு PVC பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க ரூ.15,000 மானியம் வேளாண்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments