ரூ.3 லட்சம் விவசாயக் கடன் பெற விரைவாக இதனை செய்யுங்கள்!! KCC விண்ணப்பிப்பது எப்படி?
PM கிசான் திட்டத்தில் இணைந்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் இருக்கும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.
வேளாண் இடுபொருட்கள் வாங்க மற்றும் இதர வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்வதற்காக இந்த நிதி, ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைக்காக 12.50 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள சுமார் 12.50 கோடி விவசாயிகளுக்கும் மத்திய அரசு மற்றொரு சலுகையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி பிஎம் கிசான் திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் 'கிசான் கிரெடிட் கார்டு' (KCC) வழங்கப்படுகிறது.
இதற்காக, மே 1ஆம் தேதி வரை சிறப்பு கிராம சபைகள் நடத்தி, கிசான் கிரெடிட் கார்டு இல்லாத விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெற்று, அந்தந்த வங்கிக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகள் யாருக்காவது கிசான் கிரெடிட் கார்டு இல்லை என்றால், அவர்கள் வங்கியைத் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.
எளிமையான ஒரு பக்க விண்ணப்பப் படிவத்தில், நிலம் தொடர்பான ஆவணங்கள், பயிர் விவரங்கள் மற்றும் பயனாளி வேறெந்த வங்கியிலிருந்தும் கிசான் கிரெடிட் கார்டு வசதியைப் பெறவில்லை என்பதற்கான அறிவிப்பு ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும் கடன் அட்டையின் பலனை வழங்குவதே அரசின் இத்திட்டத்தின் நோக்கமாகும். PM கிசான் திட்டத்தின் ஒவ்வொரு பயனாளியும் e-KYC சரிபார்ப்பை முடித்திருப்பது அவசியமாகும்.
சமீபத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கேஒய்சி வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வேலையைக் கட்டாயம் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதியுதவியும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
கிசான் கிரெடிட் கார்டு
கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் கடன் அட்டையாகும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அனைத்து விவசாயிகளும் இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் பெறமுடியும்.ரூ.3 லட்சம் வரை கடன் தொகைக்கு 2 சதவீத வட்டிச் சலுகை கிடைக்கிறது.
உடனடியாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 சதவீத கூடுதல் வட்டிச் சலுகை கிடைக்கிறது. இதுபோன்ற நிறைய அம்சங்கள் இதில் உள்ளன. இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டம் பிஎம் கிசான் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் இந்த வசதியை எளிதாகப் பெறமுடியும்.
மேலும்
படிக்க....
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் அதிக விவசாயிகளை ஊக்குவிக்க அரசின் புதிய திட்டம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...