விவசாயிகளுக்கு 1 ஏக்கர் நிலத்தை உழவு செய்ய ரூ.1250 உழவு மானியம்!!
வேளாண் பொறியியல் துறையில், வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவுப்பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்த தொகையில் 50% தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250/- என்ற அடிப்படையில் 1 விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ.625/-ம் மற்றும் புன்செய் உழவுக்கு ரூ.1250/-ம் அதிக பட்ச மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ- வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று, நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் வேண்டுமாயின் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
செயற்பொறியாளர் (வே.பொ.), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. கைபேசி எண்: 99529 52253.
உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, கைபேசி எண்: 90030 90440.
மேலும் படிக்க....
PM கிசான் 14வது தவணை 8.5 கோடி விவசாயிகளுக்கு ஜூலை 28-ல் வெளியிடப்படும்!!
65 கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு பவர்டில்லர் மற்றும் களை எடுக்கும் கருவிகள் 50% மானியத்தில்!!
குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...