குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள்!!
குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார பெரிய கோட்டையை சேர்ந்த விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்திற்கு குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 1400 ஏக்கர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் உதவி அலுவலர்களால் குருவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வயல்களை நேரடியாக ஆய்வு செய்தும் ஆவணங்களின் அடிப்படையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் வீதம் குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் யூரியா ஒரு மூட்டை டீஏபி ஒரு மூட்டை மற்றும் பொட்டாஸ் 25 கிலோ விதம் வழங்கிட வேளாண் உதவி இயக்குனரால் வழங்கல் ஆணை தயார் செய்யப்பட்டு இன்றைய தினம் பெரிய கோட்டை சேர்ந்த 25 விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் அவர்களால் பெரிய கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விற்பனை முனைய கருவி மூலம் பட்டியலிடப்பட்டு 100% மானியத்தில் 12 விவசாயிகளுக்கு உரம் பெறுவதற்கான வழங்கல் ஆணை வழங்கப்பட்டதுடன் உரமும் வேளாண்மை இயக்குனர் அவர்களால் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் வட்டார அளவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் துணை இயக்குனர் அனைத்து உதவி வேளாண்மை அலுவலர்களையும் வரும் வாரத்திற்குள் குருவை சாகுபடி தொகுப்புக்கான விவசாயிகளை தேர்வு செய்து முடித்திடவும் ஜூலை 30க்குள் உரம் வழங்கும் பணியை முடித்திடவும் அறிவுரை வழங்கினார் மேலும் மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் விதை நுண்ணூட்டம் உயிர் உரம் போன்றவை மானியத்தில் வழங்கப்படுவதையும் ஆய்வு செய்தார்.
அட்மா திட்ட அலுவலர் சுகிர்தா குருவை தொகுப்பு திட்ட சிறப்பு செயலியில் விவசாயிகளின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியினை மேற்கொண்டார். வேளாண் அலுவலர் இளங்கோ ஆய்வின் போது உடன் இருந்தார்.
பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் மற்றும் சி சி பணியாளர் கீர்த்திவாசன் குருவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பெரிய கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் மாரிமுத்து மற்றும் ரம்யா மானிய விலையில் உரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வேளாண் துணை இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
வரும் வாரங்களில் பருத்தி விலை விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!!
விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...