அட்மா திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு நோய் வரும் முன் காக்கும் டிரைகோடெர்மாவிரிடி!!
பயிர்களுக்கு நோய் வரும் முன் காக்கும் டிரைகோடெர்மாவிரிடி தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு நடைபெற்ற உழவர் வயல்வெளி பள்ளியில் கலந்து கொண்ட கீழக்குறிச்சி மற்றும் உலயகுன்னம் சேர்ந்த 25 விவசாயிகளுக்கு வயல்வெளிபள்ளிகையேடு, கிட்பேக் மற்றும் தலா 2 .5 கிலோ டிரைக்கோடேர்மா விரிடி என்னும் உயிரியல் கட்டுப்பாட்டு மருந்து விவசாயிகளுக்கு வழங்கினார்.
டி.விரிடி எனவே எதிர்உயிரி மருந்து உளுந்து கடலை எள் மற்றும் தேன்னையில் ஏற்படக்கூடிய வேர்வாடல் நோய், சாறு வடியும் நோய் ஆகியவற்றை ஏக்கருக்கு ஒரு கிலோ வினை ஐம்பது கிலோ மக்கிய எருவுடன் கலந்து வேருக்குஅருகில் இடுவதன் மூலம் நோய் வருமுன் தடுக்க முடியும்.
குறைந்த செலவில் பயிர் பாதுகாப்பு செய்து நிறைவான மகசூல் பெற இயலும். எனவே உழவர் வயல்வெளி பள்ளியில் கற்றுக் கொண்ட விவசாயிகள் சக விவசாயிகளுக்கும் இதன் நன்மைகளை தெரிவித்து பயன்பெற வேண்டும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.
வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் மற்றும் பயிர் இன்சூரன்ஸ் நிறுவன தாலுகா அலுவலர் மணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா, அய்யாமணி மற்றும் சிசிஅலுவலர் இளமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா!!
அட்மா திட்டத்தின் கீழ் தொழில் நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...