நெற்பயிரில் 15 முதல் 20 சதவீத மகசூலை அதிகரிக்கும் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்!!
வேளாண்மை துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் 15 முதல் 20 சதவீத மகசூலை அதிகரிக்கும் நோக்கில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் தகவல் மதுக்கூர் வட்டாரத்தில் 48 வருவாய் கிராமங்கள் உள்ளது. 48 வருவாய் கிராமங்களும் ஆறு வேளாண் உதவி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பரப்பின் அடிப்படையில் பல ஆறு முதல் 10 கிராமங்கள் வரை வேளாண் உதவி அலுவலர்களால் அனைத்து வேளாண் பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேளாண் உதவி அலுவலர்களால் பயிர் கண்காணிப்புடன் பராமரிப்புக்கான தொழில்நுட்பங்களும் உரிய காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசின் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வருவாய் கிராமம் வாரியாக திட்டம் செயல்படுத்த வழிகாட்டு முறைகள் தரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் படி ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் எப்பயிர் அதிக பரப்பின் சாகுபடி செய்யப்படுகிறதோ அதுவே வருவாய். கிராமத்துக்கான பயிராக தேர்வு செய்யப்படுகிறது. பின் தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் அனைத்து விவசாயிகளும் பார்வையிடத்தக்க வகையில் சாலை ஓரங்களில் அமைந்துள்ள 10 முதல் 15 ஏக்கர் வரையிலான பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு குறிப்பிட்ட அந்த பயிருக்கான தொழில்நுட்பங்கள் விதை முதல் விளைச்சல் களத்துக்கு செல்லும் வரையில் பயிர் மகசூலை அதிகரிக்கும் குறைந்த செலவிலான எளிய தொழில் நுட்பங்கள் மாதிரி தொழில் நுட்ப செயல் விளக்க தளைகளில் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் நேரடியாக அறியும் வகையில் தொழில் நுட்பமாக செயல்விளக்கமாக செய்து காட்டப்படுகிறது.
இதன் மூலம் அறுவடைக்கு பின் கிடைக்கப்பெற்ற கூடுதல் மகசூலும் அனைத்து விவசாயிகளும் அறியும் வகையில் செயல் விளக்கத்தளையில் செயல் விளக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன் மதுக்கூர் வடக்கு அண்டமி மோகூர் சிராங்குடி விக்ரமம் வாடிய காடு ஆகிய கிராமங்களிலும் வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு வேப்பங்குளம், வாட்டாகுடி வாட்டாகுடி உக்கடை மன்னாங்காடு காசாங்காடு முத்தா குறிச்சி, ரகுநாதபுரம் போன்ற கிராமங்களிலும்,
ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் ராமு ஆலத்தூர் முசிறி வடுகண் குத்தகை ஆலம்பள்ளம், கருப்பூர், புலவஞ்சி தளிக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் சிரமேல்குடி வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் சிரமேல்குடி ரகுநாத சமுத்திரம் இளங்காடு அத்திவெட்டி கிழக்கு, மேற்கு, கல்யாண ஓடை பழவேரி காடு ஆகிய கிராமங்களிலும் பெரிய கோட்டை வேளாண்மை உதவி அலுவலர் தினேஷ் பெரிய கோட்டை சொக்கநாவூர் புளியக்குடி காரப்பங்காடு கன்னியாகுறிச்சி கழிச்சாங்கோட்டை பாலாஜி ரகுநாத சமுத்திரம் மற்றும் மதுர பாசானிபுரம் ஆகிய கிராமங்களிலும் வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் கீழக்குறிச்சி கிழக்கு, மேற்கு, ஒலயகுன்னம்,
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
கோடை உளுந்து சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் உளுந்து விதைகள்!!
விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!
பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...