விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட செயல் விளக்கதிடல்கள் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு. மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் அண்டமி ஆவிக்கோட்டை பாவாஜி கோட்டை கீழ குறிச்சி, நெம்மேலி, பாலோஜி ரகுநாத சமுத்திரம், களிச்சாங்கோட்டை, கன்னியாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் பேஷ் 4 திட்டத்தின் கீழும் புலவஞ்சி, மதுரபாசாணி, புரம்பெரிய கோட்டை, புளியக்குடி உள்ளிட்ட கிராமங்கள் பேஸ் ஒன்று திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உலக வங்கி உதவியுடன் குறைந்த நீரில் கூடுதல் லாபம் நோக்கில் நெல்லில் திருந்திய நெல் சாகுபடி முறை உளுந்து, நிலக்கடலை, மக்காச்சோளம், குதிரைவாலி உள்ளிட்ட பயிர்களுக்கு விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.



அத்தகைய விவசாயிகளின் செயல் விளக்க தளைகளை தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா மதுக்கூர் வட்டாரத்தில் ஒலையகுன்னம் கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது குறைந்த அளவு நீரில் அதிக லாபம் தரக்கூடிய மக்காச்சோளம் குதிரைவாலி போன்றவை சாகுபடி செய்துள்ள ஒலையகுன்னம் விவசாயிகள் ரஜினி குமார் வளர்மதி மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அழகிரி பாண்டியன் மற்றும் கலியமூர்த்தி ஆகியோருடன் தற்போதைய பயிர் நிலை குறித்தும் கேட்டறிந்தார். விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை பயிரிட்டு குறைந்த அளவு நீரில் குறைந்த அளவு இடுபொருள் செலவில் உணவு உற்பத்தியை பெருக்கிடவும் கேட்டுக்கொண்டார்.






உலக வங்கி ஆய்வு நடைபெற இருப்பதால் வேளாண் உதவி அலுவலர்கள் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட பணிகளை சரியான முறையில் ஆவணப்படுத்திட கேட்டுக் கொண்டார். வேளாண்மை அலுவலர் இளங்கோ மற்றும் உதவி விதை அலுவலர் இளங்கோ ஆகியோரிடம் தற்போதைய கோடை பயிர் சாகுபடிக்கான உளுந்து மற்றும் நெல் விதைகள் இருப்பு மற்றும் தேவை பற்றி கேட்டறிந்தார். இன்றைய தினம் வயல் வாரியாக செயல் விளக்கதளைகளின் நிலையினை லேட்லாங்குடன் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ராமு தினேஷ் மற்றும் முருகேஷ் ஆவணப்பணியினை மேற்கொண்டனர்.


அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணி ராஜு சிசிதிட்ட அலுவலர் இளமாறன் மற்றும் வைஷாலினி ஆகியோர் உடன் ஒருங்கிணைத்தனர். ஒலயகுன்னம் விவசாயிகள் இந்திராணி பாவாஜி கோட்டை சுப்பிரமணியன் பாலசுப்ரமணியன் ஆகியோர் விவசாயிகளுக்கு தேவையான சித்திரைப் பட்ட உளுந்து விதைகள் நேரத்தேகிடைக்க ஆவண செய்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.


வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பயிர்வாரியான செயல் விளக்க தளைகள் தற்போதைய பயிரின் நிலை மண்புழு தொட்டிகளின் நிலை பற்றி எடுத்துக் கூறினார்.





தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post