விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்  தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை இளம் பயிராகவும் கோடை நெல் பயிர் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்திலும் உள்ளது மேலும் உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்கள் அறுவடை நிலையில் உள்ளது.



சித்திரைப் பட்ட உளுந்து தற்போது பத்து நாள் பயிராக உள்ளது.இவ்வாறு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள பயிர்களை சுற்றிலும் நன்மை செய்யும் பூச்சி தீமை செய்யும் பூச்சி ஆகிய இரண்டும் சரியான முறையில் பயிரை கண்காணித்து ஏற்ற நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி பூச்சியை கட்டுப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறு பூச்சியை பல்வேறு நிலைகளில் பல்வேறு வளர்ச்சி பருவங்களிலும் கண்காணிப்பதோடு கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவது மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகள் ஆகும்.


ஒட்டு பொறிகள் மஞ்சள் நிறத்தில் இருப்பது அதிக பூச்சிகளை கவரக்கூடியது. முக்கியமாக சாறு உறிஞ்சும் பூச்சிகள் வெள்ளை ஈக்கள் பூஞ்சை கொசுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் தாய் பூச்சிகளை எளிதில் கவரும். இந்த நாள் அடுத்த கட்ட இனப்பெருக்கம் தவிர்க்கப்பட்டு பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும். பூச்சி மருந்து அடிக்காமல் இருப்பதால் சுற்று சூழலான மண் நீர் காற்று ஆகியன பாதுகாக்கப்படுகிறது.





ஒட்டும் பொறி மழை வெயிலால் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டும்பொறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுவதில்லை. ஒட்டும் போரின் இருபுறமும் பசை இருப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தத்து பூச்சிகள், த்ரிப்சுகள், பழ ஈக்கள் மற்றும் இலை சுரங்க பூச்சிகள் வெள்ளை ஈக்கள் கொசுக்கள் புகையான்கள் போன்றவைகளை மிக எளிதாக பிடிக்க உதவும்.


ஒட்டும் பொறிகளை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பயிர்களின் வளர்ச்சி பருவம் பூக்கும் பருவம் மற்றும் கதிர் கொடுக்கும் தருணங்களில் ஏக்கருக்கு பத்து ஒட்டும் முறைகள் வீதம் பயன்படுத்த வேண்டும். நிலத்திலிருந்து நாம் பயிரிட்டுள்ள பயிரின் மேல் பரப்பிற்கு அரை அடி உயரத்துக்கு மேல் இருக்குமாறு உள்ள பூச்சிகளில் மஞ்சள் வண்ண அட்டைகளை கட்டி தொங்கவிட வேண்டும்.


மஞ்சள் வண்ண பொறிகள் பூச்சிகளை முன்கூட்டியே கண்டறிவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக உதவியாய் இருப்பதோடு மிக சிக்கனமானது வயல்களில் நிறுவுவது எளிதானது. குறைந்த பராமரிப்புடன் இயற்கை விவசாயத்துக்கும் ஏற்றது.250 -1000சதுர அடிக்கு ஒரு மஞ்சள் வண்ண ஒட்டு பொறி வீதம் பயன்படுத்தலாம்.

24X7 மணி நேரமும் நமது பயிர்களையும் கண்காணிக்கும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் மஞ்சள் வண்ணப் பொறிகளை விவசாயிகள் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி செலவினத்தை குறைத்து குறைந்த செலவில் அதிக லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார். மேலும் ஆர்விஎஸ் வேளாண் கல்லூரியை சேர்ந்த 11 மாணவர்கள் மண்டலகோட்டை அருகில் முருகானந்தம் விவசாயி வயலில் உளுந்து பயிருக்கு வரக்கூடிய அஸ்வினி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்திடவும் மஞ்சள் வண்ணோ ஒட்டும்பொறிகள் பயன்படுத்துவது பற்றி செயல் விளக்கமாக செய்து காட்டினார்.



மேலும் விவசாயி வீரக்குமார் வயலில் ஏக்கருக்கு பத்து இடத்தில் மஞ்சள் வண்ணப் பொறிகளை வைத்து தாய்அந்து பூச்சிகளும் தத்துப் பூச்சிகளும் மஞ்சள் வண்ண அட்டையில் எளிதாக ஒட்டி பிடிபடுவதை செயல் விளக்கமாக செய்து காட்டினார். ஆவிக்கோட்டை விவசாயி கலைவாணன் கீழக்குறிச்சி இளையராஜா, அசோகன் மற்றும் பழனிவேல் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் உதவி அலுவலர் முருகேசன் செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி நடைபெற்றது!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post