தஞ்சாவூர் மாவட்டம், விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை மற்றும் மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம் பெங்களுரு அவர்களுடன் இணைந்து இம்மாவட்டத்தில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் (முஏலு) உத்திரவாத சான்றளிப்பு திட்டத்தில் (புளு) 20 குழுக்களில் 463 விவசாயிகள் பதிவு செய்து கடந்த ஓர் ஆண்டாக உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் பயன்பெறும் வகையிலும் அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கில் பட்டுக்கோட்டை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 04.09.2024 அன்று உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு.கா.அண்ணாதுரை, பி.எஸ்சி.பிஎல் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அவர் தம் உரையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் இயற்கை வேளாண்மைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தஞ்சை மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாரம்பரிய நெல் விதைகளான கருப்பு கவினி, மாப்பிள்ளை சம்பா போன்ற ரகங்களை மானிய விலையில் விநியோகித்தும் அவர்களுக்கு தேவையான இடுபொருட்களை மானிய விலையில் வழங்கியும் இயற்கை வேளாண்மை வளர்ச்சியினை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்று வழங்கப்படும் என்று தனது சிறப்புரையில் உறுதி அளித்தார். இப்பயிற்சியினை தலைமையேற்று நடத்திய திருமதி.அக்ரி.எம்.ஜோதிலட்சுமி பி.எஸ்சி(விவ) விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை சென்னை அவர்கள் உயிர்மச் சான்றளித் துறையின் திட்டங்கள் மற்றும் இயற்கை விவசாய முறையில் விளைந்த பொருட்களின் வணிக வாய்ப்புகள் குறித்து விபரமாக தெரிவித்தார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) திருமதி.வெ.சுஜாதா, பி.எஸ்சி(விவ) அவர்கள் உரையில் மாநில அரசின் திட்டங்கள் மற்றும் உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் குறித்தும் இயற்கை வேளாண்மையில் உள்ள இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்(ம.தி) திருமதி.ச.மாலதி, பி.எஸ்சி(விவ) அவர்கள் உரையில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்தும் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
இப்பயிற்சியினை நடத்திய மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம் பெங்களுரு தொழில் நுப அலுவலர் அர்ஜுன், எம்.எஸ்சி அவர்கள் மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையத்தின் நோக்கங்கள்மற்றும் இம்மையத்தின் மூலம் வழங்கப்படும் திரவ உயிர் உர உற்பத்தி தொழில்நுட்ப மற்றும் பிற இயற்கை இடுபொருட்கள் குறித்தும் அதன் பயன்பாடுகுறித்தும் தெளிவாக விளக்கனார்.
திருமதி..எம்.வானதி எம்.எஸ்சி(விவ) மதிப்பீட்டாளர், தமிழ்நாடு உயிர்மச் சான்றளிப்பு துறை சென்னை அவர்கள் இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விபரமாக தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை நிலைய தலைவர் முனைவர் இரா.அருண்குமார், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், பேராசிரியர் பார்த்தீபன், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் தண்டபானி, முனைவர் மு.ஊ.சிவபாலன் தேசிய இயற்கை வேளாண்மை பயிற்றுநர் தொழில் நுட்ப உரையாற்றினார்கள்.
இப்பயிற்சியில் இரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து அதற்கு நிகரான இயற்கை இடுபொருட்கள் சுயமாக தயாரித்து தற்சார்பு வேளாண் துறைக்கு மாறுவதால் கிடைக்கப் பெறும் நன்மைகள் குறித்து விளக்கினார்கள்.
இப்பயிற்சியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்சார்பு அங்ககச் சான்றளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 463 விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் சுமார் 1000 ஏக்கருக்கும் மேலாக இயற்கை வேளாண்மையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில் அவ்விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டி, ஜீவாமிர்தம் தயாரிக்குமி முறை பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் பங்குபெற்ற விவசாயிகள் ஜீவாமிர்தம் தயாரிக்க ஏதுவாக அதற்கு தேவையான இடுபொருட்களான நாட்டு வெல்லம், பாசிபயறு மாவு வழங்கியும் எவ்வாறு தயாரிப்பது குறித்தும் செயல்விளக்கம் திரு.து.கோபாலகிரு்ணன், விதைச் சான்று மற்றும் உயிர்ம சான்று உதவி இயக்குநர் திரு.நவீன் சேவியர், விதை ஆய்வாளர் மற்றும் திருமதி.எஸ்.உறசீனாபேகம், விதைச் சான்று அவர்களால் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.
அலுவலர் பயிற்சியின் இறுதியாக விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஐயப்பாடுகளுக்கு விளக்கமளித்தும் மேற்கொண்டு தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துக்கப்பட்டது. இயற்கை வேளாண்மை குறித்த விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கண்காட்சி இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறையின் அனைத்து விதைச் சான்று அலுவலர்கள் மற்றும் அனைத்து விதை ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்சிசியின் நிறைாக பட்டுக்கோட்டை விதைச் சான்று அலுவலர் திருமதி.அக்ரி.சா.சங்கீதா, எம்.எஸ்சி(விவ) அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...