மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம் திட்ட பணிகளை ஆய்வு செய்த துணை வேளாண்மை இயக்குனர்!!



மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம் திட்ட பணிகளை ஆய்வு செய்த துணை வேளாண்மை இயக்குனர்!!


மதுக்கூர் வட்டாரத்தில் மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம் திட்ட பணிகளை ஆய்வு செய்த துணை வேளாண்மை இயக்குனர் சாருமதி முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் மதுக்கூர் வட்டாரத்திற்கு 75 ஏக்கர் இலக்கு வழங்கப்பட்டு வேளாண் உதவி அலுவலர்களால் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 


தொடர்ந்து நெல் பயிர்  சாகுபடி செய்வதால் மண்ணிலிருந்து அதிக சத்துக்கள் உறிஞ்சப்பட்டு மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் உற்பத்தி அதிகரிக்க அதிக அளவில் இரசாயன உரங்கள் களைக்கொல்லி பூச்சி கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும் குறைந்து விட்டது. 




இதனை கருத்தில் கொண்டு மண்வளத்தை பேணி காக்கவும் மக்கள் நலம் காக்கவும் உயிர்ம வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு 25-26 ஆம் நிதியாண்டுக்கு 75 ஏக்கருக்கு 1500 கிலோ பசுந்தாள்உர விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனால் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள்  பாதுகாக்கப்பட்டு உயிர்ம முறையில் மண்ணின் சத்துகள் அதிகரிக்கப்படுகிறது இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு மக்களின் நலம் பேணிக்காக்கப்படுகிறது. 


மண்ணில் வளர்ந்து மண்ணிலே மக்கி மண்வளம் பெருக்கும்  பசுந்தாளுர பயிர்  சாகுபடி செய்துள்ள நிலங்களை தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் சாருமதி அவர்கள் மதுக்கூர் மற்றும் மோகூர் பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தார். 


மோகூர் கிராம விவசாயிகள் லட்சுமணன் மற்றும் மங்கையர் திலகம் ஆகியோருடன் கலந்துரையாடி பசுந்தாள்உரபயிர் சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு கிடைத்த நன்மை பற்றியும் நேரடியாக கேட்டறிந்தார். ஆய்வுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சரவணன் மற்றும் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் செய்திருந்தனர். 


வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு மற்றும் சுரேஷ் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மதுக்கூர் வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் பசுந்தாளுரபயிர் சாகுபடி செய்யப்பட்டு  வேளாண் உதவி அலுவலர்களால் பயிர் நிலையானது ஆய்வு செய்யப்பட்டு உரிய போர்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கி கூறினார்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!


வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!


விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments