அட்மா திட்டத்தின் கீழ் மதுரபாஷாணிபுரம் கிராமத்தில் நடைபெற்ற உழவர் வயல்வெளி பள்ளி!!



அட்மா திட்டத்தின் கீழ் மதுரபாஷாணிபுரம் கிராமத்தில் நடைபெற்ற உழவர் வயல்வெளி பள்ளி!!

வேளாண் துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் அய்யம்பெருமாள் கலந்து கொண்டு சிறப்புரை அட்மா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் மதுர பாசாணிபுரம் கிராமத்தில் நடைபெற்ற நெல் வயல்வெளி பள்ளி பயிற்சியில் தஞ்சை மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை இயக்குனர் அய்யம்பெருமாள் கலந்து கொண்டு நேரடி நெல் விதைப்பு குறித்த விவசாய தொழில்நுட்பங்களை வயல்வெளி பள்ளி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். 





நேரடி நெல் விதைப்பு செய்துள்ள வயல்களில் காலத்தை செய்ய வேண்டிய களை மேலாண்மை மற்றும் குருத்து பூச்சி இலை சுருட்டு புழுக்கள் போன்றவற்றின் தாக்குதல்களை வருமுன் அறிந்து ஒருங்கிணைந்த முறையில் நெல் பயிரை பாதுகாப்பது குறிக்கும் எடுத்துரைத்தார். 


உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பயிர் மகசூல் அவற்றின் பங்கு பற்றி எடுத்துக் கூறியதோடு  வயல்வெளி பள்ளியில் கலந்து கொண்ட விவசாயிகளுடன் உழவன் செயலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறி விவசாயிகளை விவசாயம் தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளங்கையில் பெறுவது எப்படி என்பது பற்றி எடுத்துக் கூறினார். 





முன்னோடி விவசாயி வெண்ணிலா வயலில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகமான ஆத்தூர் கிச்சிலி சம்பா ரகத்தினை பாய் நாற்றங்காலாக பாவியிருப்பதை அனைத்து மகளிர் விவசாயிகளும் தெரிந்து கொண்டனர். 


பயிற்சி நிறைவில் கலந்து கொண்ட 30 விவசாயிகளுக்கும் தமிழ்நாடு அரசின் பூச்சி நோய் கண்காணிப்பு காலண்டர் மற்றும் அரசின் பல்வேறு வேளாண்மை துறை மானிய திட்டங்கள் குறித்த கையேடு வழங்கி பின் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தார்பாலின் வழங்கினார். 





நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட அலுவலர்கள் ராஜூ அய்யாமணி மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் வைஷ்ணவி மற்றும் ஆசா செய்திருந்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.







தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!


வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!


விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments