தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள்!!
தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் மன்னாங்காடு தொகுப்பை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார் மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் கீழ் மன்னாங்காடு கிராமத்தை தலைமையாகக் கொண்டு 125 விவசாயிகள் மே மாதம் முதல் பல்வேறு கட்ட பயிற்சிகள் மற்றும் விவசாயிகள் கலந்தாய்வு அடிப்படையிலும் இயற்கை விவசாயம் செய்ய விருப்பமுள்ள விவசாயிகளின் ஆவணங்களை பரிசீலித்தபின் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் நஞ்சில்லா விவசாயத்தை தற்சார்பாக செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் 3 டிரம்கள் மற்றும் மூலிகைகளை சேகரிக்கும் பொருட்டு ஒரு பிளாஸ்டிக் சேமிப்பு கலனும் தலா 5 கிலோ சர்க்கரையும் விவசாயிகளுக்கு பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் வித்யா மற்றும் வேளாண் துணை இயக்குனர் மாலதி ஆகியோர் வழங்கினர்.
வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு முருகேஷ் சுரேஷ், ராமு மற்றும் பூமிநாதன் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் விழாவினை ஒருங்கிணைத்தனர். வேளாண்மை அலுவலர் சரவணன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி அட்மா திட்ட அலுவலர்கள் ராஜி அய்யா மணி ஆகியோர் விவசாயிகளுக்கான விபரங்களை பதிவு செய்தனர். மண்ணாங்காடு இயற்கை விவசாய குழு முன்னோடி விவசாயிகள் ராமச்சந்திரன் கோவிந்தராஜ் ரேவதி ராதிகா ஜெயலட்சுமி ராஜேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மதுக்கூர் வட்டார தேசிய இயற்கை வேளாண்மை இயக்க கிசான் சகிகள் ஈஸ்வரி மற்றும் அருள் ஆகியோர் விவசாயிகளை வரவேற்றனர். இயற்கை வேளாண் திட்ட ஒருங்கிணைப்பாளர் வைசாலினி இடுபொருள் வழங்கும் பணியினை பதிவு செய்தார். அத்திபட்டி சென்னை இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவ மூர்த்தி பயிற்சி யில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை மண்ணுக்கு நஞ்சின்றி பைசா செலவின்றி செய்வதற்கான தொழில் நுட்பங்களை விளக்கி கூறினார்.
வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு மற்றும் முருகேஷ் பீஜாமிர்தம், ஜீவாமிர்தம் மூலிகை பூச்சி விரட்டி, கன ஜீவாமிர்தம் மற்றும் மீன் அஸ்திரா தயாரிப்பு குறித்து கருத்து காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
மேலும் படிக்க....
சம்பா நடவு நெல் பயிர் வளர்ச்சியை குறுகச்செய்யும் பாசியினை கட்டுப்படுத்தும் காப்பர் சல்பேட்!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...