விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கலாம். ஜி-9 வகை திசு வாழை கன்றுகள் நம்முடைய வாழை போன்று அல்லாமல் சிறிய செடி போல இருக்கும். 11 மாதத்தில் காய்ப்பு எடுக்க ஆரம்பித்துவிடலாம்.
பச்சை பழ வாழை பயிரிட்டுள்ளேன். ஒரு தாரில் 135 முதல் 140 காய்கள் இருக்கும். தற்போதைய நிலையில் தார் ஒன்று ரூ.500 முதல் 600 வரை விற்பனையாகிறது. ஒரு வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது.
ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெற முடியும். ஆறு அடிக்கு
ஒரு கன்று நட வேண்டும். 15-வது நாளில் ஒரு வாழைக்கு 5 கிலோ மாட்டு சாண உரம், 200 கிராம்
டி.ஏ.பி., 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும். 40-வது நாள் இதே அளவு உரம் இட வேண்டும். 150-வது நாள் 10 கிலோ மாட்டு சாணம் மட்கியது வைக்க வேண்டும். திசு வாழையை பொறுத்தவரை
நீர் சத்து அதிகம் தேவை. இதனால் சொட்டு நீர் பாசனம் சிறந்தது.
இந்த வாழை 6-வது மாதம் பூக்கும். 8-வது மாதம் காய்க்க துவங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவாகும். ஆனால், வருமானமோ ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கும். வாழையின் ஊடு காய்கறி விவசாயமும் மேற்கொள்ளலாம்.
அதே போல், நெல் விவசாயம் உரம் போடாமல் இயற்கை விவசாயம் மூலம் மேற்கொண்டு வருகிறேன். நெல் நடவுக்கு முன்பு, வேம்பு இலை, வாகை இலை ஆகியவற்றை நிலத்தில் போட்டு உழுது அதன்பிறகு நடவு பணி துவங்குகிறது. இதனால், இயற்கையான அரிசி நமக்கு கிடைக்கிறது.
திசுவாழை வளர்ப்புத்
திட்டம்- விவசாயிக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசம்!
கோவையில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு தலா 2,500 திசு வாழைக் கன்றுகள் (Tissue Banana seedlings) இலவசமாக வழங்கப்படவுள்ளன.திசுவாழை வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
திசு வாழை வளர்ப்புத் திட்டம் (Tissue
Banana Cultivation)
இதன்
ஒருபகுதியாக கோவை
மாவட்டத் தோட்டக்கலைத்
துறை சார்பில்
திசுவாழை வளர்ப்பை
ஊக்குவிக்கும் விதமாக
தேசியத் தோட்டக்கலை
இயக்கத்தின் (National Horticulture Mission) கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக
வாழைக் கன்றுகள்
வழங்கப்படுகின்றன.மாவட்டம்
முழுவதும் மொத்தம்
3 லட்சத்து 75 ஆயிரம்
வாழைக் கன்றுகளை
விவசாயிகளுக்கு வழங்கி
வளர்க்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2,500 வாழைக்கன்றுகள்
(2,500 banana seedlings)
இந்தத்திட்டத்தின்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2,500 கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இதனை வளர்க்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பயன்படுத்த வேண்டிய உரங்கள், இயற்கை மருந்துகள் உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட உள்ளன.
எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை
(Horticulture Department Office) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...