7800 கால்நடைகளுக்கு
கால்நடைக் காப்பீடு!! பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!
கால்நடைகளுக்கு
மானியம்
கால்நடைகளுக்கு
மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட கோவை மற்றும் தர்மபுரி
மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கோவையில் 3,900 கால்நடைகளுக்கும், தர்மபுரியில் மூலம் 3,900 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா்
அறிவிப்பு
கால்நடை
இறப்பதால் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க காப்பீடு செய்யுங்கள் என்று கால்நடை வளா்ப்போருக்கு கோவை மாவட்ட ஆட்சியா்
ஜி.எஸ்.சமீரன் மற்றும் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மாவட்டத்தில் கால்நடை
பராமரிப்புத்துறை சார்பாக அறிவிப்பு கொடுத்துள்ளனர்.
கோவை
ஆட்சியர் அழைப்பு
இது
குறித்து கோவை மாவட்ட ஆட்சியா்
ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில், கால்நடைகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்பினை ஈடுசெய்யும் வகையில் தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2020-2021ஆம் ஆண்டில்
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 3,900 கால்நடைகளுக்கு
மானியத்துடன் கூடிய காப்பீடு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,
காப்பீடு தொகை
50% முதல் 70%வரை மானியம்
வறுமை
கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டுக்கு மேலுள்ள கால்நடை வளா்ப்போா் 50 சதவீதம் மானியத்திலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கால்நடைகளுக்கு
அதிகபட்ச வயது
8 ஆண்டு
வயதுடைய கறவை பசுக்கள், எருமைகள்
மற்றும் முதல் 3ஆண்டுகள் வயதுடைய வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும்.
5 கால்நடைகளுக்கு
காப்பீடு
அதிகபட்சமாக
ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 5 கால்நடைகளுக்கு
இத்திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
தொடர்பு
கொள்ள யாரை அணுக வேண்டும்
ஆா்வமுடைய
கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாய பெருமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ
நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி
ஆட்சியர் அழைப்பு
இதோபோல்,
தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, 35 ஆயிரம் வரை மதிப்புள்ள கால்நடைகளுக்கு
மானியத்துடன் காப்பீடு செய்யலாம். அதற்கு மேலுள்ள கால்நடைகளுக்கு, கூடுதல் தொகைக்கான காப்பீடு கட்டணத்தை, கால்நடை உரிமையாளர்களே செலுத்த வேண்டும்.
காப்பீடு தொகை
50% முதல் 70%வரை மானியம்
இத்திட்டத்தில்
வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், 70 சதவீத மானியத்திலும், வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்கள், 50 சதவீத
மானியத்திலும் காப்பீடு செய்லாம். அதிகபட்ச, இரண்டரை வயது முதல், 8 வயது
வரையிலான, 5 பசு, எருமைகளுக்கு இத்திட்டத்தில்
காப்பீடு செய்து கொள்ளலாம்.
வெள்ளாடு,
செம்மறி ஆடுகளுக்கும், மானியம்
மேலும்,
ஒன்று முதல், 3 வயதுடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும், மானிய விலையில் காப்பீடு செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்பு
கொள்ள யாரை அணுக வேண்டும்
ஆா்வமுடைய
கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாய பெருமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ
நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
பால் பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அரசு கொடுக்கும் ரூ.1.75 லட்சம் மானியம்!!
கால்நடை வளர்க்க விருப்பமா ?? அரசு மானியத்துடன் கால்நடை வளர்ப்பு தொழில் ஐடியாக்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...