PM கிசான் திட்டத்தில் இணைவது எப்படி? 9-வது தவணை எப்போது கிடைக்கும்??
பிரதமர்-கிசான் திட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?
பிரதமர்
கிசான் யோஜனா (PM Kisan Yojana) டிசம்பர் 1, 2018 முதல் நடைமுறைக்கு வந்தது. இது பிரதமர் நரேந்திர
மோடி (prime minister
Narendra Modi) தலைமையிலான
அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
இதுவரை
பி. எம் கிசான் திட்டத்தில் 8 தவணைகள் விவசாயிகளின்
வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 9-வது தவணை வரும் ஆகஸ்ட்
01-2021 முதல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என மத்திய அரசாங்கம்
அறிவித்துள்ளது.
யார்? யார்?
பயன் பெறலாம்?
பி. எம் கிசான்
நிதி திட்டம் என்பது மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின்
கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று
தவணைகளில் ஆண்டுக்கு 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்குத் தகுதியான
விவசாய குடும்பங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, பயனாளிகளின்
வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படுகிறது.
பி. எம் கிசான்
திட்டத்தின் தவணை எப்போது கிடைக்கும்?
இதற்கான
முதல் தவணை ஏப்ரல் 1 முதல்
ஜூலை 31 வரையும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல்
நவம்பர் 30 வரையும் மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல்
மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. இதுவரை
பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ்,
நாட்டில் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ .1, 37,192 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை
அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் கிசானின் 9 வது தவணையை விடுவிப்பதற்கான
ஏற்பாடுகளை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
திட்டத்தில்
இணைவது எப்படி?
நீங்கள்
பி.எம். கிசானில் உறுப்பினராக
விரும்பினால், மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரி அல்லது பட்வாரி மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இது தவிர, பொது சேவை மையங்கள்
மூலமாகவும் இந்த திட்டத்திற்கு பதிவு
செய்யலாம். இது தவிர, இந்த
திட்டத்திற்கான விண்ணப்பத்தை பிரதமர் கிசான் போர்ட்டல் மூலமாகவும் செய்யலாம்.
நீங்களே
சுயமாக விண்ணப்பிக்கலாம்
1. பிரதமர்
கிசானின் வலைத்தளத்தைப் பார்வையிடவும்
https://Pmkisan.gov.in\.
2. 'Farmers Corner' என்ற
பெயரில் ஒரு விருப்பம் தோன்றும்.
3. இதில்,
'New Farmer Registration' விருப்பம்
கீழே தோன்றும்.
4. New Farmer Registration' விருப்பத்தை
கிளிக் செய்யவும்.
5. ஒரு
புதிய பக்கம் திறக்கப்படும், அதில் நீங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை
(Captcha) நிரப்ப
வேண்டும்.
6. ஆதார்
எண்ணுடன் சில தனிப்பட்ட தகவல்களை
நிரப்ப வேண்டும்.
7. நீங்கள்
ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உங்கள் விவரங்கள் தோன்றும். நீங்கள் முதல் முறையாக பதிவு செய்கிறீர்கள் என்றால், Record not found
with given details, do you want to register on PM-KISAN Portal என கொடுக்கப்பட்ட விவரங்களுடன்
பதிவு செய்ய விரும்புகீறீர்காள என தோன்றும்.
8. அதற்கு
Yes and proceed என்பதைக்
கிளிக் செய்யவும். பின் ஒரு படிவம்
தோன்றும், அதில் கேட்கப்படும் தகவல்களை சரியாக நிரப்பி சேமிக்கவும்.
9. பின்னர்,
உங்கள் நிலத்தின் விவரங்கள் கேட்கப்படும். சரியான தகவலை நிரப்பி சேமிக்கவும்.
10. இதன்
பின் பதிவு செயல்முறை முடிவுபெறும். பதிவு செய்த பின் உங்ளுக்கு ஒரு
பதிவு எண் மற்றும் குறிப்பு
எண் வழங்கப்படும் அவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...