கோமாரி நோய்
தாக்கிவிட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கால்நடைகளுக்கான எளிய மருத்துவம்!!
கோமாரி:
முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக துளசி-100 கிராம், விரலி மஞ்சள்-3 துண்டு, உப்பு 10 கிராம் ஆகியவற்றைச்
சேர்த்து அரைத்து மூன்று உருண்டைகளாகப் பிரித்துக் கொண்டு, தினம் ஒன்று வீதம் மூன்று
நாட்களுக்கு உள்ளே கொடுத்தால் கோமாரி அண்டாது.
கோமாரி நோய்
தாக்கிவிட்டால், கால் கிலோ மருதாணி இலையை இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி
ஆற வைத்து, இளம்சூட்டில் கால் மற்றும் வாய்ப்பகுதியில் புண் உள்ள இடங்களைக் காலை-மாலை
வேளைகளில் கழுவி விட வேண்டும்.
மூன்று மஞ்சள்
வாழைப்பழம், 100 மில்லி நல்லெண்ணெய் கலந்து பிசைந்து, 24 மணி நேரம் வைத்திருந்து கொடுக்க
வேண்டும். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், நோயில் இருந்து மாடுகள் மீண்டு விடும்.
ஆடுகளைத் தாக்கும்
ஈரல் முட்டி நோய்:
இந்த நோய் வெள்ளாடுகளை
அதிகமாகத் தாக்கும். ஈரமான இடங்களில் கட்டுதல், சாணி, சிறுநீர் தேங்கிய இடங்களில் கட்டுதல்
போன்றவற்றால் இந்நோய் தாக்கும். நோய் தாக்கிய ஆடுகள் பலம் குன்றிப்போய் விடும். ஒரு
ஆட்டுக்கு 50 முதல் 70 கிராம் பருத்தி விதை என்ற அளவில், தினமும் ஒரு வேளை என ஏழு நாட்களுக்குக்
கொடுத்தால், நோய் சரியாகி விடும்.
மூக்கடைப்பான்:
100 கிராம் கண்டங்கத்திரிப் பழத்தை (கறி முள்ளி) இடித்து வெள்ளைத்துணியில் கட்டி,
ஒரு லிட்டர் ஆட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, ஒவ்வொரு ஆட்டின் மூக்கிலும்,
3 சொட்டுகள் வீதம் காலை-மாலை வேளைகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு விட்டு வந்தால் மூக்கடைப்பு
சரியாகி விடும்.
படுசாவு (கத்தல்
நோய்):
மழை முடிந்து
10 நாட்கள் வரை… ஒன்றரை மணி நேரம் மேய்த்துவிட்டு, ஒரு
மணி நேரம் மேய்ச்சல் இல்லாத இடத்தில் நிறுத்தி, செரிமானம் செய்ய விட்டு, மீண்டும் ஒரு
மணி நேரம் மேய விட வேண்டும்.
வெள்ளைக்கழிச்சலுக்கு
மருந்து : கோழிக்கு
கீழாநெல்லி-50 கிராம், சின்ன வெங்காயம்-5, பூண்டு-2 பல், மஞ்சள்-5 கிராம், சீரகம்-20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து அரிசிக் குருணை அல்லது நெய்யில் கலந்து தொடர்ந்து, 3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால்… வெள்ளைக் கழிச்சல் சரியாகி விடும்.
துளசி-20 இலை, தும்பை-10 இலை, கற்பூரவள்ளி-1 இலை, தூதுவளை-1 இலை, சீரகம்-5 கிராம், மஞ்சள்-5 கிராம், மிளகு-5 கிராம், பூண்டு-5 பல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால் சுவாச நோய் சரியாகி விடும். இது பத்து கோழிகளுக்கான அளவு.
கால்நடைக்கான
மூலிகை உருண்டை : பிரண்டை-100 கிராம், சோற்றுக் கற்றாழை-200 கிராம், நெல்லிக்காய்-2,
முருங்கைக் கீரை-100 கிராம், கீழாநெல்லி-100 கிராம், ரிசலாங்கண்ணி-100 கிராம், குப்பைமேனி-100
கிராம், வேப்பங்கொழுந்து-100 கிராம், பூண்டு-5 பல், சின்ன வெங்காயம்-5 ஆகியவற்றை அரைத்துக்
கொள்ள வேண்டும்.
சீரகம்-20 கிராம்,
மிளகு-10 கிராம், மஞ்சள் தூள்-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தக் கலவை
இடித்தக் கலவை… இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவற்றுடன் பனைவெல்லம்-200 கிராம்
கலந்து சிறு, சிறு உருண்டை பிடித்து, கல் உப்பில் தோய்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு
மாட்டுக்கான அளவு. ஆடுகள் எனில்… ஐந்து ஆடுகளுக்குப் போதுமானதாக இருக்கும்.
மேலும் படிக்க....
இயற்கை விவசாயத்தில் தேமோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் வழிமுறைகள்!!
நெல் சாகுபடி – இயந்திரமயமாக்குதல் பல்வேறு நெல் நாற்று நடும் இயந்திரங்கள் அறிமுகம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...