11 லட்சம் நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு!! கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி அறிவிப்பு!!


நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு! தீபாவளிக்கு பரிசளித்த அமைச்சர்


திமுக தேர்தல் வாக்குறுதி


திமுக தேர்தல் அறிக்கையில்  முக்கியமான ஒன்று கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு. ஐந்து சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற அனைவரின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.


நகைக்கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பு


திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்சிக்கு வந்த பின் கடன் விவரங்களை ஆய்வு செய்தபோது தான் அதில் நடைபெற்ற ஊழல்கள் தெரியவந்தது.



நகைக்கடன் தள்ளுபடி மோசடி


நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஒரே நபர் பல வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் பல வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது என்ற பல சம்பவங்கள் இது போல் நடைபெற்றுள்ளன.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி


எனவே இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நகைக் கடன் பெற்றவர்களின் விவரங்கள் வங்கிகளால் சேகரிக்கப்பட்ட்டன.  இதனால் எப்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.


5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி


இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற நபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.



கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு


கூட்டுறவுத்துறை அமைச்சர் .பெரியசாமி(I. Periyasamy) இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்றும், நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்என்று அமைச்சர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க....


புதியதாக நெற்பயிருக்குக் காப்பீடு செய்ய - விவசாயிகளுக்கு அழைப்பு! ஒரு ஏக்கர்க்கு ரூ.31,000 இழப்பீடு!!


மழை பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!!


பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 6 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கல்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post