பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு! ஒரு ஏக்கருக்கு ரூ.52,000 வரையில் இழப்பீட்டுத் தொகை!!



பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு! ஒரு ஏக்கருக்கு ரூ.52,000 வரையில் இழப்பீட்டுத் தொகை!!


பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2021-22ம் ஆண்டு ரபி பருவத்திற்கு, மதுரை மாவட்டத்தில் பிர்க்கா அளவில் துவரை, பாசிபயறு, உளுந்து, கம்பு, சோளம், நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.


அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர தகுதியானவர்கள். பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.



பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு போன்ற இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.


விவசாயிகளின் முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்ப படிவம், கிராம நிர்வாக அதிகாரியிடம் (வி.ஏ.ஓ) பெறப்பட்ட துவரை, பாசிபயறு, உளுந்து, கம்பு, சோளம், நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு பயிர் சாகுபடிக்கான அசல் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது பிரீமியத்தொகையும் கீழ்கண்ட விவரப்படி உரிய தேதிக்குள் செலுத்த வேண்டும்.


எனவே. விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் துவரை, பாசிபயறு, உளுந்து, கம்பு, சோளம், நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு ரபி பருவத்திற்கு கீழ்கண்ட உரிய தேதிகளுக்குள் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொள்கிறார்.


RPMFBY– 2021-22 – ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான பிரீமியம் தொகை மற்றும் பிரீமியம் செலுத்த கடைசி தேதி விபரங்கள்.



பிர்க்கா வாரியாக


துவரைக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ. 256.43 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 17,095.14 வரையில் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 30.11.2021 ஆகும்.


உளுந்துக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ. 256.43 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 17,095.14 வரையில் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 15.11.2021 ஆகும்.


பாசிபயறுக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ. 256.43 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 17,095.14 வரையில் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 15.11.2021 ஆகும்.


நிலக்கடலைக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ. 356.25 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 23,750.20 வரையில் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 15.12.2021 ஆகும்.


எள்ளுக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ. 122.25 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 8,150.20 வரையில் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 31.12.2021 ஆகும்.


கம்புக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ. 188.25 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 12,550.20 வரையில் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 30.11.2021 ஆகும்.



சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ. 182.25 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 12,150.20 வரையில் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 15.12.2021 ஆகும்.


கரும்புக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ. 2,600செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 52,000 வரையில் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 31.08.2022 ஆகும்.


ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்காக்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு மட்டும் தான் பயிர்க் காப்பீடு செய்ய இயலும், அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்காக்களை தெரிவதற்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினை விவசாயிகள் தொடர்பு கொண்டு அதன் பின்பு பயிர் காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 


மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


மழை காலத்திற்கு பின் நெற்பயிரில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்!!


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அனைத்து வகையான பயிர்களுக்கும் காப்பீடு செய்ய கடைசி தேதி விபரங்கள்!!


பிரதமர் பயிர் காப்பீடு 33 மாவட்டங்களுக்கான பயிர் காப்பீடு செய்வதற்கான விபரங்கள்! வேளாண்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

1 Comments

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...