டிசம்பர் 3ம் தேதி உருவாகுகிறது புதிய புயல் 'ஜாவத் புயல்' மீண்டும் கன மழை!!
தெற்கு தாய்லாந்து
மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது
தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்தது. நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக
அது மாறியது. இன்று (வியாழக்கிழமை) அது புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது.
இப்புயல் சின்னம்
இன்று மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்தால்
தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3ம் தேதி அன்று
இது புயல் சின்னம் மாற உள்ளது. அப்போது அதன் சீற்றம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடலில் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3ம் தேதி உருவாகும்
புயலுக்கு “ஜாவத்” என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதிஅரேபியா
வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது.
ஜவாத் என்றால்
அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன
மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
3ம் தேதி பிற்பகலுக்கு
பிறகு புயல் வடக்கு திசை நோக்கி மேலும் நகரும். அதன் பிறகு அது வடக்கு ஆந்திரா, தெற்கு
ஒடிசா கடலோர பகுதியை நெருங்கும். அப்போது ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த மழை
முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4ம் தேதி ஜாவத்
புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3ம் தேதி அது நகரும்
திசையை பொறுத்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா இடையே எந்த பகுதியில் கரையை கடக்கும்
என்பது தெரியவரும்.
இதற்கிடையே
அரபி கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மகாராஷ்டிரா- கோவா இடையே
நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக
இருக்கிறது. இது வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து குஜராத் கடலோரத்தை சென்றடையும்.
இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக மகாராஷ்டிராவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மும்பையில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக
டிசம்பர் 2ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான்
கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே
70 கிலோ மீட்டர் வேகத்திலும்,.
டிசம்பர் 3ம்
தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75
கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திரா
மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்
இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 4ம் தேதி வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு ஆந்திரா, ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க....
தமிழகத்தை நெருங்கும் தாழ்வுப்பகுதி ரெட் அலேர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Timeto Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...