10 மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம்!! வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்!!
சென்னை: ‛‛ராமநாதபுரம்,
நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, தேனி தென்காசி,
டெல்டா உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர்
புவியரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து
அவர் வெளியிட் அறிக்கையில் தெரிவித்ததாவது
தெற்கு வங்க
கடற்பகுதியில் (4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த
24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு
திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும்.
இன்று (நவ.,24 ம் தேதி)
ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,
ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை
பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை 25ம் தேதி:
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் மிக கன மழையும், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, கடலுார், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,
ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான
மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,
உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 26ம் தேதி
துாத்துக்குடி, ராமநாதபுரம், கடலுார், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்
பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும்.
வரும் 27 ம் தேதி
கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை,
ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில்
இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி
நேரத்தில் பதிவான மழை அளவு
போடி நாயக்கனுார்
(தேனி), ராமநாதபுரம் தலா 13 செ.மீ., சங்கரன்கோவில் (தென்காசி) 6 செ.மீ., ராமேஸ்வரம்
(ராமநாதபுரம்), கூடலுார், வீரபாண்டி (தேனி), ஆயிக்குடி (தென்காசி), கடலாடி (ராமநாதபுரம்),
ஆழியார் (கோவை), சூரங்குடி (துாத்துக்குடி) தலா 5 செ.மீ., தேக்கடி (தேனி) 4 செ.மீ.,
வாலினோக்கம், திருவாடானை, மண்டபம், முதுகுளத்துார், பாம்பன், ராமநாதபுரம் (ராமநாதபுரம்),
கொடுமுடி (ஈரோடு), கழுகுமலை, கடம்பூர், திருச்செந்துார், காயல்பட்டினம் (துாத்துக்குடி),
ராஜபாளையம் (விருதுநகர்) தலா 3 செ.மீ.,
மீனவர்களுக்கான
எச்சரிக்கை
இன்று 24 மற்றும் 25ம் தேதி
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில்
சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 26ம் தேதி
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 27 மற்றும் 28 ம் தேதி
தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தகவல்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...