அடுத்த 24 மணி நேரத்தில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
வங்க
கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.
குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மார்ச் 3 ஆம்
தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுக்குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக இருப்பதால்,
வரும் மார்ச் 2 ஆம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்களான, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இதேபோல மார்ச் 3 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடம் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை,
காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைகான வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. 04.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமாக மழை பெய்யக்கூடும் எனவும்,
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
தஞ்சாவூர்,
திருவாருர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கன
மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை
பொறுத்தவரை வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், குறைந்தபட்ச
வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் இருக்கும்.
மீனவர்களுக்கான
எச்சரிக்கை
இன்று, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளை, தென் தமிழக வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என அறிவித்துள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும்
படிக்க....
ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு! வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்!!
வாட்ஸ் ஆப்-ல் வானிலைத் தகவல்கள் 'மேக்தூத்' வானிலை தகவல்களை விவசாயிகள் எளிதில் பெறலாம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...