விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! 27 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படும்!!
இராணிப்பேட்டை
மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி 15ந் தேதி முதல் 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில்
2021-22 ஆம் ஆண்டு சம்பா பருவ நெல் கொள்முதல் செய்ய 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல்
நிலையங்கள் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளது.
27 நேரடி
நெல் கொள்முதல்
அரக்கோணம் தாலுகாவில் செய்யூர், இச்சிப்புத்தூர், சோகனூர், பள்ளூர், தக்கோலம், சோளிங்கர் தாலுகாவில் சோளிங்கர், கேசவனாங்குப்பம், கொடைக்கல், போலிப்பாக்கம், ஆற்காடு தாலுகாவில் வளையாத்தூர், அரும்பாக்கம், புதுப்பாடி குட்டியம், குப்பிடிசாத்தம், மேல் புதுப்பாக்கம், கீழ்ப்பாடி,
நெமிலி தாலுகாவில் சிறுகரும்பூர், ஆயர்பாடி, சிறு வளையம், பாணாவரம், அகவலம், ஜாகீர் தண்டலம் கண்டிகை, கோடம்பாக்கம், பனப்பாக்கம், சயனபுரம், வாலாஜா தாலுகாவில் அம்மூர், ஆயிலம் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில்,
தங்களது பெயர், ஆதார் எண், புல
எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும்
www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, நெல் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை
கொண்டு முன்பதிவு செய்திட வழிமுறை செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்தவுடன் குறுஞ்செய்தி
விவசாயிகள் இணையத்தில் பதிவு செய்தவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இணையத்தின் வழியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.
இதன் அடிப்படையில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் மேற்கண்ட 27 நேரடி நெல்
கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை கொண்டு வந்து குறித்த நேரத்தில் விற்பனை செய்து பயன்
பெறலாம்.
மேலும் நவரை பருவம் முடியும் பருவத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை நேரடி கொள்முதல் செய்திட மேலும் பல இடங்களில் இரண்டாம் பாகமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இத்தகவலை இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய இணையதளம் வாயிலாக முன்பதிவு!!
நெல் தரிசில் பயறு வகை சாகுபடி செய்ய 50% மானியத்தில் வேளாண் இடுபொருள்கள் விநியோகம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...