முன்னுரிமை அடிப்படையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல்! உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி!!
மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல்
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் மூன்று ரோட்டவேட்டர் இயந்திரங்களை வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் விவசாயிகளுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் பயறு வகையின் கீழ் மூன்று ரொட்டவேட்டர்கள் மானியத்தில் வழங்க இலக்கு வழங்கப்பட்டது.
முன்னுரிமை அடிப்படையில் வேளாண் இயந்திரங்கள்
முன்னுரிமை அடிப்படையில் ஆவணங்கள் பெறப்பட்டு மூன்று விவசாயிகளுக்கு இன்று வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் ஜஸ்டின்அவர்களால் ரொட்டவேட்டர்கள் வழங்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் ஜெரால்ட் மற்றும் முருகேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள்
கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் கன்னியாகுறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பவர் டில்லர் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரம் விநியோகம்.
மதுக்கூர் வட்டாரம் கன்னியாகுறிச்சி கிராமத்தில் கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் ஐந்து உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆறு மாதம் முடிவுற்ற நிலையில் டிசம்பர் மாதம் குழுக்களின் தீர்மானத்தின் அடிப்படையில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பண்ணை இயந்திரங்கள் ஆன பவர் டில்லர் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரம் வாங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி
உழவர் உற்பத்தியாளர் குழு, கன்னியாகுறிச்சி க்கு கூட்டு பண்ணைய திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் சுழல் நிதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் வைக்கோல் கட்டும் இயந்திரம் மற்றும் பவர் டில்லர் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களால் வாங்கப்பட்டு இன்றைய தினம் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அவர்கள் முன்னிலையில் குழு உறுப்பினர்களின் உபயோகத்திற்காக ஆய்வுக்கு பின் துவக்கி வைக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி குழு உறுப்பினர்களின் தீர்மான விபரங்களை ஆய்வுக்கு காட்டினார். இந்நிகழ்வில் கன்னியாகுறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் உதவி அலுவலர்கள் முருகேஷ் மற்றும் தினேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ஐயா மணி ராஜு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கன்னியாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேம்பரசி தமிழரசன் வேளாண் இணை இயக்குனருக்கு நன்றி கூறினார்.
ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கூட்டு பண்ணைய திட்டம் பற்றி அறிந்து கொண்டனர்.
தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் வைக்கோல் கட்டும் இயந்திரம் மற்றும் பவர் டில்லர் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களால் வாங்கப்பட்டு இன்றைய தினம் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் அவர்கள் முன்னிலையில் குழு உறுப்பினர்களின் உபயோகத்திற்காக ஆய்வுக்கு பின் துவக்கி வைக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி குழு உறுப்பினர்களின் தீர்மான விபரங்களை ஆய்வுக்கு காட்டினார். இந்நிகழ்வில் கன்னியாகுறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண் உதவி அலுவலர்கள் முருகேஷ் மற்றும் தினேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ஐயா மணி ராஜு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கன்னியாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேம்பரசி தமிழரசன் வேளாண் இணை இயக்குனருக்கு நன்றி கூறினார். ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் சேர்ந்த மாணவிகள் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு கூட்டு பண்ணைய திட்டம் பற்றி அறிந்து கொண்டனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி
வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும்
படிக்க....
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு! வரும் 10ந்தேதி வரையிலான வானிலை அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...