தரமான விதை உற்பத்திக்கு அறுவடைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!



தரமான விதை உற்பத்திக்கு அறுவடைக்குப்பின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!


தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையினரால் வழங்கப்படும் விதைச்சான்றளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து வயல் தரம் தேறிய விதைப்பண்ணைகள் அறுவடை செய்யப்படும் போதும், பின்பு வயல் மட்ட விதைகளை பாதுகாப்பதிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஷீபா தெரிவித்தார்.



இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்


வயல்தரம் தேறிய விதைப்பண்ணைகளில் இயந்திர அறுவடை செய்யும் போது பிற இரக கலப்பு ஏற்படுவதை தவிர்க்க அறுவடைக்கு முன்பாக இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். 


பின்பு இயந்திரத்தில் அறுவடை செய்யப்பட்டு வரும் முதல் இரு மூட்டைகளை விதைக்கு தவிர்த்து விட்டு மீதமுள்ள விதைகளை விதைக்காக எடுத்துக் கொள்வது சாலசிறந்தது. இதன் மூலம் இயந்திர அறுவடையினால் ஏற்படும் பிற இரக கலப்பு தவிர்க்கப்படுகிறது.


புதிய கோணிப்பைகளில் சேகரிக்க வேண்டும்


விதைப்பண்ணைகளிலிருந்து அறுவடை செய்யப்படும் விதைகளை புதிய கோணிப்பைகளில் மட்டுமே சேகரிக்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட வயல்மட்ட விதைகளை உடனடியாக காய வைத்து ஈரபதம் 13 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும். 



இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் நெல் விதைகளில் பூஞ்சாண வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதுடன் நெல் விதைகளின் நிறம் மாறுவதோடு முளைப்புத்திறனும் பாதிக்ககூடும். 


உலர் களத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகாக நெல் விதைகளை களத்தில் பரப்பி மிதமான வெயிலில் காய வைத்து அடிக்கடி கிளறி விட்டு படிப்படியாக ஈரபதத்தை குறைக்க வேண்டும். இதன் மூலம் நெல் விதைகளின் முளைப்புத்திறன் பாதுகாக்கலாம்.

 

நன்கு காய வைக்கப்பட்டு 13 சதவீதத்துக்கு கீழ் ஈரபதமுடைய வயல்மட்ட விதைகளை புதிய கோணிபைகளில் பிடித்து அதில் விதைச்சான்று எண், பயிர், இரகம், சான்றளிப்பு நிலை போன்ற விவரங்களை எழுதி சணல் கொண்டு தைத்து ஈயக் குண்டு கோர்த்து, சுத்தி அறிக்கை பெற ஸ்பெக்ஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 



அங்கீகாரம் பெற்ற விதை


தொடர்ந்து விதைச்சான்று அலுவலர் விதைக்குவியலை ஆய்வு செய்து முத்திரையிட்டு, அங்கீகாரம் பெற்ற விதையினை விதை சுத்தி நிலையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவார். விதைசுத்தி நிலையத்தில் தொடர் சான்று பணி மேற்கொள்ளப்படும்.

 

மேற்கண்ட வழிமுறைகளை விதைப்பண்ணை விவசாயிகளும், விதை உற்பத்தியாளர்களும் முறையாக கடைபிடித்து தரமான விதை உற்பத்திக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என குமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மே.ஷீபா கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க....


தற்போது உரத்திற்கு தட்டுப்பாடு! ஒரு மூட்டை விலை ரூ.1,000 வரை உயரும் என தகவல்!!


இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் வேளாண் சார்ந்த வானிலை முன்னறிவிப்பு!!


விதை நெல் வாங்கும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Post a Comment

0 Comments