Random Posts

Header Ads

விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியம் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்!!



விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியம் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்!!


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்தில் பாரம்பரியக் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 மானியம் வழங்கப்பட உள்ளதால், வாங்கிப் பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என கொடைக்கானல் தோட்டக்கலை தெரிவித்துள்ளது.



கொடைக்கானல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ.8,000


2022-2023 தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் வீரிய உயர் ரக காய்கறி விதைகள் பரப்பு விரிவாக்கத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல், மிளகு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் நாற்றுகளுடன் கூடிய மானியம் வழங்கப்பட உள்ளது.


அவக்கோடா கன்றுகள் ஒரு ஏக்கருக்கு ரூ.5,760 மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் புதிதாக எலுமிச்சை, டிராகன்பழம், ஸ்டாபரி போன்ற பழ வகைகளின் உற்பத்தியை அதிரிக்க மானியம் வழங்கப்பட உள்ளது. பண்ணைக்குட்டை அமைத்திட ரூ.75 ஆயிரம் மானியமும், தேனீ வளர்ப்பதை ஊக்குவிக்க தேனீ வளர்ப்பு பெட்டிகளும் மானியத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.



சிப்பம் கட்டும் அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சமும், நிரந்தர மண்புழு கூடாரம் அமைக்க ஒரு எண்ணுக்கு ரூ.50 ஆயிரமும் மானியமாக வழங்கப்பட உள்ளது. பூண்டு, பழ பயிர் சாகுபடி மற்றும் பாரம்பரிய காய்கறிகள் பயிரிட ஒரு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். 


நிரந்தர பந்தல் அமைத்து காய்கறி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் வரை மானியமும் விவசாய முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த இன கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் ஒட்டுப்பொறி ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்.



விண்ணப்பிப்பது எப்படி?


விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து கொண்டும் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம். 


தேவையான ஆவணங்கள்


  • சிட்டா


  • அடங்கல்


  • ரேசன் கார்டு


  • ஆதார் கார்டு நகல்


  • புகைப்படம் 2


  • வங்கி கணக்கு முதல்பக்க நகல் 


ஆகியவற்றை சமர்ப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானியங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


தகவல் வெளியீடு


துணை இயக்குனர்,

தோட்டக்கலைத்துறை,

கொடைக்கானல்.



மேலும் படிக்க....


குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் ரூ.4000 தவறவிடாதீர்கள்!!


PMFBY 2019 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் ஃபசல் பீமா யோஜனா மோசமாக செயல்படுகிறது!!


18 மாவட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படும் வேளாண்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments