விவசாய பணிகளை மேற்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,700 கோடி பயிர் கடன்!!
கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் இதுவரை, 4.87 லட்சம் விவசாயிகளுக்கு, 3,700 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை தவிர்த்த, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குகின்றன.
அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு, 7 சதவீதம் வட்டி. குறித்த காலத்திற்குள் கடனை அடைத்து விட்டால், வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
2021 -- 22ம் நிதியாண்டில், 14.48 லட்சம் விவசாயிகளுக்கு, 10 ஆயிரத்து 292 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டன.நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் இதுவரை, 4.87 லட்சம் விவசாயிகளுக்கு 3,700 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும், 65 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு, 453 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பயிர் கடன் வழங்குவதில், அதிக கெடுபிடி காட்டாமல் விரைந்து வழங்குமாறு, வங்கி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தாமதம் செய்வது, 'கமிஷன்' கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, விவசாயிகள் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய தலைமுறையை சேர்ந்த விவசாயிகளுக்கு, பயிர் கடன்கள் வழங்குவதில் முன்னுரிமை தரப்படுகிறது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்று, விவசாய பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க....
PMFBY 2022-23 பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!
ஒரு ஹெக்டேர்க்கு ரூ.13,500 விவசாயிகள் தாமாகவே முன்வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்!!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற 90% மானியம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...