கிராமப்புற இளைஞர்களுக்கான தென்னை சாகுபடி முறைகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி!!
வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டம் மற்றும் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் கிராமப்புற இளைஞர்களுக்கான தென்னை சாகுபடி முறைகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி 19. 12 .2023 இன்று தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஏழு நாள் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இப்பயிற்சியில் திருமதி. பாலசரஸ்வதி வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வேளாண்மை இணை இயக்குனர் தஞ்சாவூர் திரு. ந.க. நல்லமுத்துராஜா அவர்கள் தலைமையுறையாற்றினார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் முனைவர் ம.சுருளிராஜன் அவர்கள் திட்ட விளக்க உரை வழங்கினார். இப்பயிற்சியில் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 28 விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் நோயியல் முனைவர் ம. சுருளிராஜன் அவர்கள் தென்னையில் ஏற்படும் நோய்கள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் பாடல் பாடி விவசாயிகளுக்கு விளக்கமான முறையில் எடுத்துக் கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் மதுக்கூர் சி.சுகிதா தென்னையில் நுண்ணுட்ட சத்தினை மேம்படுத்த இயற்கையான முறையில் போறான் கரைசல் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் பயிற்சியில் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் காளான் உற்பத்தி மையம் விவசாயிகளுக்கு நேரடியாக உதவி வேளாண்மை அலுவலர் செல்வி. விஜயலலிதா காண்பித்து விளக்கம் அளித்தார் மற்றும் தென்னை பண்ணையில் உள்ள நாற்றங்கால் மற்றும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களையும் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
பயிற்சியின் நிறைவாக உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை அலுவலர் திரு.கண்ணன் அவர்கள் விவசாயிகளுக்கு நன்றி கூறினார் .மேலும் அடுத்த ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் பயிற்சியில் தென்னை ரகங்கள், தென்னையில் நோய் மேலாண்மை முறைகள், தென்னையில் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல், கைவினைப் பொருட்கள் மற்றும் நீரா பானம் தயாரித்தல் என்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெற இருப்பதால் இன்று பயிற்சியில் கலந்து கொண்ட 28 விவசாயிகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
பயிற்சிக்கான வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி .சி. சுகிதா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. V.ரமேஷ் பயிற்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது எப்படி?
கிராம மேலாண்மை குழு கூட்டம்! தளிக்கோட்டையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு!!
உலக மண்வள தின கொண்டாட்டம்! நிலமும் நீரும் நிஜ வாழ்வின் அச்சாணி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...