வேளாண்மை துறையின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு முன் பருவ பயிற்சி!!

வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டம் வேப்பங்குளம் மற்றும் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம வேளாண் முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு முன் பருவ பயிற்சி வழங்கப்பட்டது.



பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் திருமதி .எஸ் .திலகவதி அவர்கள் முன்னிலை வகித்து முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் மானியத்தில் வழங்கவிருக்கும் பசுந்தால் உர விதைகள் உற்பத்தி முறைகள் மற்றும் பசுந்தால் உற்பத்தி செய்வதால் மண்ணிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், இயற்கை இடுபொருட்களான மீன் அமிலம், அமிர்த கரைசல், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை பயன்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்து பயிர் சாகுபடி செலவினை முற்றிலும் குறைத்து மண் வளத்திணையும் உடல் நலத்தினையும் மேம்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் மண் வள அட்டை இயக்கம்24ம நிதியாண்டில் விவசாயிகளுக்கு 50 சத மானியத்தில் திரவ உயிர் உரம் 100 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் இளங்கோ நெல் பயிருக்கு மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட அளவின் அடிப்படையில் சாகுபடி செய்தல் குறித்தும் மற்றும் நீர் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார்.


வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா திரவ உயிர் உரம் பயன்படுத்துதல் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து கூறினார். பயிற்சியின் நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர்கள் ஜெரால்ட் மற்றும் .ராமு விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.



பயிற்சிக்கான ஏற்பாட்டினை ஊராட்சி மன்ற தலைவர் வேப்பங்குளம் ராமதாஸ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பூர், உதவி தொழில்நுட்ப மேலாளர் அய்யாமணி மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் செய்திருந்தனர். பயிற்சியில் வேளாண் விரிவாக்கம் மையம் ஆலத்தூர் மற்றும் கீழ குறிச்சி கிடங்கு மேலாளர்கள் கலையரசன் மற்றும் ஜெகதீசன் கலந்து கொண்டு திரவ உயிர் உரங்களை விநியோகித்தனர்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post